Saturday, September 25, 2010

அல்லாஹ்வின் அருள் [PJ] பொய்யனுக்கா? -அந்நஜாத்.

சமீபத்தில் சென்னையில் கூடிய “ததஜ’வின் கூட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாகவும் “அல்லாஹ்வின் அளப்பரிய அருள்’ இந்த ஜமாஅத்தின் மீது இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று “உணர்வலை’யில் உளறி இருந்தார்கள். உணர்வு 16-22 ஜூலை 2010.

உண்மையில் அதிக கூட்டம் கூடுவதுதான் அல்லாஹ்வின் அருளுக்கு அங்கீகாரம் என்றால்- இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான கூட்டம் கூடியது முஸ்லிம்கள் பக்கம் அல்ல. மாறாக இணை வைப்பவர்கள், நயவஞ்சகர்கள் மற்றும் பொய்யர்கள் பக்கமே! பெரும் கூட்டத்தைக் காட்டும் பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் அருள் என்றால், நாளை மறுமையில் பெரும் கூட்டத்திற்கு அல்லாஹ்வின் அருளாக கிடைக்கப் போவது நரக நெருப்பே. இஸ்லாத்திற்கு அடித்தளம் அமைத்த “பத்ர்’ போரில் பெரும் கூட்டம் கூடியது மக்கத்து காபிர்கள் பக்கமே. ஆனால் அல்லாஹ்வின் அருள் யார் பக்கம் இருந்தது? சிறு கூட்டமாக இருந்த நபி தோழர்கள் பக்கமே.

முஸ்லிம்களில் முதல் பொய்யன் முஸைலிமா!
இன்றுPJ (பொய்யன் ஜைனுலாப்தீன்) கூட்டிய கூட்டத்தைப்போல் அன்றைய அரபுலக யமாமா பகுதியில் இருந்த முஸைலிமா பின்னால் பெரும் கூட்டத்தினராக முஸ்லிம்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த முஸ்லிம்கள் குறிப்பாக நஜ்து பிரதேசத்தை சார்ந்தவர்கள் இப்பொய்யனை ஆதரித்தனர். இவன் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, தனக்கு நபித்துவத்தில் பங்கிருப்பதாக வாதித்தான். இவனது சாதுர்யமான சூனியப் பேச்சால் குர்ஆனுக்கு புது விளக்கம் கொடுத்து முஸ்லிம்களை வழிகெடுத்தான்.

யமாமா பகுதி முஸ்லிம்களுக்கு உண்மை இஸ்லாத்தின் தூதை தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட முயற்சிகளையும், தனது வாதத் திறமையினால் முறியடித்தான். மேலும் தொழுகைக்கு அழைக்கப்படும் “அதான்’ பாங்கொலியிலும் மாற்றம் செய்தான். இன்னும் மதுபானத்தையும் விபச்சாரத்தையும் ஆகுமானதாக (ஹலால்) அறிவித்தான். நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த பொழுது “குடிப்பதில்லை, விபச்சாரம் செய்வதில்லை என்று அவர்களிடம் பைஅத் செய்தோம்; இப்பொழுது நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்ட தால் பைஅத் உறுதிமொழி முடிந்துவிட்டது. இனி மது, மாது ஹலால்’ என்று விளக்கமளித்தான்.

ஐந்து வேளை தொழுகை இனி தேவையில்லை. ஏனென்றால் தானும் நபி என வாதித்த “ஸஜ்ஜா’ எனும் ஏமன் பெண்ணை மணந்து அவளுக்கு மணக் கொடையாக (மஹர்) பஜ்ரு, இஷா தொழுகைகளை அவளுக்கு அளித்து விட்டதால், இனி மூன்று வேளை தொழுதால் போதும் என்று அறிவித்தான். மார்க்கம் மிகவும் லேசாக்கப்பட்டதால் உலக இன்பங்களுக்கு ஆட்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த வழிகேடனை பின்பற்றினர். பொய்யன் முஸைலிமாவைப் பின்பற்றும் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இறுதியாக ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று அறிவித்தான். இதற்கு அவன் கொடுத்த விளக்கம் அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

“நபியே! அவர்களை பரிசுத்தமாக்கிட, தூய்மைப்படுத்திட அவர்களின் செல்வாங்களிலிருந்து (ஜகாத் எனும்) தர்மத்தை எடுப்பீராக!’ அல்குர்ஆன் 9:103

இந்த இறைக் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தவரை அவர்களிடம் ஜகாத் கொடுத்தோம். இப்பொழுது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டதால் அவர்களிடம் ஜகாத் கொடுக்க முடியாது. ஆகவே ஜகாத் இனி கொடுக்கத் தேவையில்லை என்று அறிவித்தான். ஜகாத் கொடுக்கக் கடமைப்பெற்ற முஸ்லிம்கள் இச்சலுகையினால் அவனை கொண்டாடி மகிழ்ந்து பெரும் கூட்டமாக உருவெடுத்தனர்.

30 பொய்யர்கள் வராதவரை இறுதி நாள் வராது!
என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தபடி ஒவ்வொரு பொய்யர்களாக அந்தந்தக் காலக் கட்டங்களில் பல பேர் வந்து விட்டனர். நாம் வாழும் இக்காலத்தில் வந்த பொய்யன்தான் “ததஜ’ (தமிழ்நாடு தஜ்ஜால் ஜமாஅத்) நிறுவிய P.J. தமிழ் நாட்டு தஜ்ஜால் (பொய்யன்) முஸைலிமாவை பின்பற்றியே குர்ஆனுக்கு குதர்க்க மான விளக்கங்கள் கொடுத்து கூட்டம் சேர்த்து வருகிறார். “அவர்களின் செல்வத்தை தூய்மைப் படுத்திடவே ஜகாத்’; எனவே ஒருமுறை ஜகாத் கொடுத்து தூய்மைப்படுத்தப்பட்ட செல்வத்திற்கு மறுபடியும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. பொய்யன் ஜைனுலாப்தீனின் இம் மார்க்கத் தீர்ப்பில் ஈர்க்கப்பட்ட பணக்கார முஸ்லிம்கள் கூட்டம் இவ்வழிகேடனை பின்பற்றுகிறது. இக்கூட்டத்தைப் பார்த்துத்தான் அல்லாஹ்வின் அருள் இவர் ஜமாஅத்திற்கு இருப்பதாக பெருமையடித்திருக்கிறார்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு பொய்யன் முஸைலிமாவிடம் பெரும் கூட்டம் 40 ஆயிரம் பேர். இவனை எதிர்த்துப் போரிட கலீஃபா அபூ பக்கர் சித்தீக் (ரழி) அனுப்பிய படையில் இருந்தவர்கள் 13 ஆயிரம் பேர் மட்டுமே. அல்லாஹ்வின் அருள் யார்மீது இருந்தது? 40 ஆயிரம் பேர் கொண்ட பெரும் கூட்டத்தின் பக்கமா? நிச்சயமாக இல்லை என்று வரலாறு கூறுகிறது.

பொய்யன் ஜெயினுலாப்தீன் என்று எழுதுவது அவதூறா – குறை சொல்லுதலா?
தமிழ்நாடு தஜ்ஜால் ஜமாஅத்(ததஜ) நிறுவனர் PJ பொய்யன் ஜைனுலாப்தீன் என்று நாம் எழுதுவது சில சகோதரர்களுக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தருகிறது. நாடறிந்த நாவலரைப் போய் பொய்யன் என்று எழுதலாமா? என்று கேட்கிறார்கள். இச்சகோதரர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பொது வாழ்வில் உள்ள ஒரு நபரின் செயல்பாடுகள் மார்க்க முரணாக இருக்கும் பொழுது அதை அடையாளம் காட்டி பிற முஸ்லிம்களை எச்சரிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் பாடம் 48ல்
“குழப்பவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிட மானவர்கள் குறித்து (மற்றவர்களை எச்சரிக்க) குறை கூறுவது அனுமதிக்கப்பட்டதே’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்கள்.

“ஒரு மனிதர் (எங்கள் வீட்டிற்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை உள்ளே வரச் சொல்லுங்கள், அந்தக் கூட்டதாரிலேயே (இவர்) மோசமானவர்’ என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடமும் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள், பிறகு அவரிடம் கனிவாகவே பேசினீர்களே!’ என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஆயிஷாவே! மக்கள் எவரது அருவருப்பான பேச்சுக்களிலிருந்து (தங்களை) தற்காத்துக்கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்!’ (அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்று கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) புகாரீ-6054.

நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம்!
PJ ஐ பொய்யன் ஜெயினுலாபிதீன் என்று எழுதுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அனைவரும் அறிந்த ஒன்றை மட்டும் பார்ப்போம்.
தமுமுக என்ற பெயர் அவர்களிடம் இருந்தது; அதன் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவர்களிடம் இருந்தன. அனைத்து கிளைகளும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. “நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம். உணர்வு 16-22 ஜூலை 2010 பக்கம் 2.
“தமுமுக கட்டிட நிதி’ என்று பொது மக்களிடமிருந்து வசூலித்த பணத்தால் வாங்கப் பட்ட கோடிக்கணக்கான மதிப்புடைய கட்டிடங்களையும், தமுமுகவிற்காக நடத்தப்பட்ட “உணர்வு’ பத்திரிக்கையையும் தன் பெயரில் வைத்துக் கொண்டு இவ்விரண்டையும் தமுமுக விடம் ஒப்படைக்காமல் மோசடியாக அபகரித்த பொய்யர் எழுதுகிறார் “நாம் வெறும் கையுடன் வெளியேறினோம்’ என்று.

இவர் உண்மையில் நேர்மையாளர், வாய்மையாளர், அல்லாஹ்விற்கு அஞ்சுபவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தமுமுகவிற்காக வாங்கப்பட்டு தன்னிடம் இருக்கும் கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் தமுமுகவிடம் ஒப்படைத்து விட்டு வெளி வந்திருக்க வேண்டும். பொய்யர்கள் உலக ஆதாயத்திற்காக எதையும் செய்வார்கள். பொய்யனை பொய்யன் என்று தான் எழுதவேண்டும். இது தான் நபிவழி. நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யன் முஸைலிமா ஒரு கடிதம் எழுதி, தானும் நபித்துவத்தில் பங்காளியாக்கப்பட்டுள்ளதாக வாதித் தான். இவனுக்கு நபி(ஸல்) ஒரு கடிதம் எழுதினார்கள்.
“அருளாளன், அன்புடையோன் அல்லாஹ் வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலிமாவிற்கு, இறைவனை போற்றி புகழ்ந்த பின்-நேர்வழியை பின்பற்று கின்ற அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்! சந்தேகமில்லாமல் இந்த உலகமும் அதில் உள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது’ என்று குறிப்பிட்டுருந்தார்கள். ஜாதுல் மஆது

பொய்யர்களை பொய்யன் என்று அடையாளம் காட்டுவது தவறு கிடையாது என்று PJயும் ஒப்புக் கொள்கிறார். ஆகவே சகோதரர்கள் யாரும் மன வருத்தம் அடையத் தேவையில்லை.

PJ அடையாளம் காட்டும் பொய்யர்.
“பாதை மாறிய பக்ரி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஹாமித் பக்ரியை பசப்பு மொழியாளர்! பச்சைப் பொய்யர்! முனாஃபிக் என்று புகழ்ந்து(?) எழுதிவிட்டு இறுதியில் தன் சர்வாதிகாரத்தைக் காட்டி பக்தர்களை மிரட்டி தன் கஸ்டடியில் வைத்துக்கொள்ள முயல்கிறார். “இன்றைக்கு நம்மில் சிலரிடமும் தலைக்கனம் இருக்கின்றது. ஜமாஅத்தினால்தான் நாம் என்பதை விடுத்து விட்டு, நம்மால்தான் இந்த ஜமாஅத் என்ற கர்வம் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்; அவர்களது முடிவு இப்படித்தான் இருக்கும்.
“ஏகத்துவம்’ ஆகஸ்ட் 2010 பக்கம் 10,11

அந்நஜாத்தில் இருக்கும்போது நஜாத்தான் பீ.ஜெ., பீ.ஜெ.தான் நஜாத் என தனது பக்தர்களைக் கொண்டு கூற வைத்தார்; இன்று த.த.ஜ. தான் பீ.ஜெ., பீ.ஜெ. தான் த.த.ஜ. என்ற மாயையை பக்தர்களைக் கொண்டு உருவாக்கிக் கொண்டு இப்படி ஊருக்கு உபதேசம் செய்கிறார்.

எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை. (நஜாத், ஆகஸ்ட் 1986 பக்.12)
புரோகிதர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடைமுறைப்படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர்களைச் சப்ளை செய்வதில்லை.
(நஜாத், ஜூன் 1986 பக்.2)

இப்படி உறுதி அளித்து அந்நஜாத்தில் பகிரங்கமாக எழுதியவர் அதிலிருந்து தடம் புரண்டு ஆக், ஜாக், தமுமுக, முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் ஐக்கிய பேரவை, அனைத்து தவ்ஹீத் கூட்ட மைப்பு, ததஜ, இதஜ என பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருக்கிறவரும், பல புரோகித மதரஸாக்களை உருவாக்கி புரோகிதர்களை சப்ளை செய்து கொண்டிருக்கும் பொய்யன் ஜெயினுலாப்தீனுக்கு அவர் ஹாமித் பக்ரிக்கு சூட்டியுள்ள புகழாரங்கள்(?) அனைத்தும் பொருந்துமா? இல்லையா? இஸ்லாத்தை விட தன்னுடைய ததஜ அமைப்பே சரியானது; அதிலிருந்து எந்த நிலையிலும் யாரும் வெளியேறக் கூடாது என தனது பக்தர்களை மிரட்டி இருப்பது எதைக் குறிக்கிறது? அவரது ஆணவத்தைத்தானே. ததஜவிலிருந்து அவரே வெளியேறும் நிலை ஏற்பட்டால், இன்று ஜாக்கையும், தமுமுகவையும் தூற்றுவதுபோல் தூற்றமாட்டாரா? தன்னுடைய பேச்சை வேதவாக்காகக் கொண்டு தனது பக்தர்கள் அந்நஜாத்தைப் படிப்பதே இல்லை என்ற குருட்டு தைரியத்திலல்லவா அந்நஜாத் துடைத்தெறியப்பட்டது எனப் பிதற்றியுள்ளார் பொய்யன் ஜெயினுலாப்தீன்.

அந்நஜாத்தில் ஆசிரியர் பணிக்கு மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு “நான் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை; வாங்குவதாகவும் இல்லை’ (அந்நஜாத், ஜூன் 1986, பக்.3) என்ற பச்சைப் பொய்யை எழுதியவர்தானே பொய்யன் ஜெயினுலாப்தீன்.

பொய்யன் ஜைனுலாப்தீன் கூறுவது பச்சைப் பொய் என்பது மவ்லவிகளை நம்பாமல், குறிப்பாக பொய்யன் பீ.ஜே.யை நம்பாமல் சுயமாக குர்ஆன், ஹதீஸை படித்து விளங்குகிற அனைவரும் அறிந்ததே. அல்லாஹ்வின் உதவியால் “அந்நஜாத்’ பத்திரிக்கை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும், விளம்பரமுமில்லாமல் கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து இன்றும் புதுப் பொலிவுடன் வெளிவந்து கொண்டிருப்பதற்கு இக்கட்டுரையே சாட்சி. மக்களின் கூட்டத்தை சேர்த்து பலம் காட்டவோ, மக்களை திருப்திப் படுத்துவதற்காக எதையாவது எழுதி வாசகர் எண்ணிக்கையை உயர்த்துவதோ அந்நஜாத்தின் நோக்கமல்ல. குறிப்பாக கூட்டத்தை சேர்ப்பது அந்நஜாத்தின் வேலையல்ல. கூட்டத்தை சேர்ப்பதற்காக நபிமார்கள் அனுப்பப்படவில்லை. அல்லாஹ்வின் செய்தியை சொல்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருந்தது. அந்நஜாத்தின் பணியும் இதுதான். அந்நஜாத் இதழை எத்தனை பேர் படிக்கிறார்கள். எவ்வளவு பேர் ஆதரிக்கிறார்கள் என்று கணக்கு போடுவதும் எங்கள் வேலை அல்ல.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்: “தெளிவாக எடுத்துச் சொல்வதை தவிர(வேறு எதுவும்) எம்மீது கடமையில்லை’ (அல்குர்ஆன் 36:17)

அல்லாஹ் நாடியவர்கள் சத்தியத்தைப் படிப்பார்கள், விளங்குவார்கள்; தங்கள் வாழ்க்கையில் கடை பிடித்து (நஜாத்) ஈடேற்றம் பெறுவார்கள். அந்நஜாத் படிப்பவர்கள் அனைவரும் எங்கள் பின்னால் வரவேண்டும் என்று எவரையும் நாங்கள் அழைக்கவில்லை. மக்கள் கூட்டத்தைத் திரட்டுவது இப்லீசின் வேலை; நபிமார்கள், நேர்வழி நடப்பவர்கள் வேலை அல்ல. வழி கெட்ட 72 பிரிவினர்கள் மட்டுமே மக்கள் கூட்டத்தை தம் பின்னே திரட்டி பலம் காட்டுவார்கள். சத்தியத்தை உள்ளது உள்ளபடி உரைப்பது மட்டுமே அந்நஜாத்தின் பணி.

உதாரணமாக: சென்னையில் அல்துல்லாஹ் ஜமாலியுடன் நடந்த விவாதத்தில் “எங்கள் ஜமாஅத்தின் வீரியம் அதிகம், நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸில் (SMS) பத்தாயிரம் பேரை உடனே கூட்டி காட்டுவோம். உங்களால் முடியுமா? “அதுபோல நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுங்கள். அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம். சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார். பி.ஜெ.’ ஏகத்துவம் ஆகஸ்ட் 2010 பக்.43

பொய் நபி மிர்சா குலாமைப் பின்பற்றும் காதியானி முஸ்லிம்கள் ஜமாஅத் உலகளாவிய அளவில் 195 நாடுகளில், 18 கோடி மக்களையும் பல்லாயிரம் கோடி சொத்துக்களையும், அதன் தலைவர் நிகழ்த்தும் ஜும்ஆ உரையை உலக முழுதுமுள்ளவர்கள் கேட்கும் அளவில் ஒலி, ஒளிபரப்பு வசதியும் பெற்றிருக்கிறார்களே? அவர்கள் நேர்வழியில் இருப்பதாகப் பொய்யன் ஜெயினுலாப்தீன் ஒப்புக் கொள்வாரா? இவர் அவர்களை முஸ்லிம்களாகவே ஏற்பதில்லையே! அதே நிலை தான் பொய்யன் பீ.ஜைனுலாப்தீன் இன்றைய நிலையும்.

இன்ஷா அல்லாஹ் பொய்யன் ஜைனுலாப்தீன் எண்ணப்படி “அந்நஜாத்’ இதழ் இருக்கும் இடம் தெரியாமல் அல்லாஹ் துடைத்தெறிந்து விட்டாலும், அல்ஹம்துலில்லாஹ் என்றுதான் கூறுவோம். இதனால் சத்தியம் அழிந்துவிட்டது. பொய்யர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று பொருளாகாது. ஒரு வரலாற்று சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

கலீபா உஸ்மான்(ரழி) அவர்களின் இறுதிக்காலம்
இஸ்லாத்தின் முதல் பிரிவினைவாதிகள், குழப்பவாதிகள், அதிதீவிர தவ்ஹீது பேசிய கலகக் கும்பல் கலீஃபா உஸ்மான்(ரழி) அவர்கள் வீட்டை முற்றுகை இட்டனர். கலீஃபாவிற்கு ஆதரவாக ஒரு சில தனி நபர்களைத் தவிர மதீனாவின் ஆதரவாளர்கள் ஒருவரும் இல்லை. அவருக்கு எதிராக பெரும் கலகக் கூட்டம் சூழ்ந்திருந்தார்கள். முதலில் பள்ளிக்கு தொழ வருவதை தடுத்தார்கள்; அவர்களின் வீட்டிற்குள் உணவு மற்றும் அத்தியாவசிய பண்டங்களைக் கூட கொண்டு போவதை தடை செய்தனர். இறுதியில் குடிப்பதற்கு தண்ணீரும் மறுக்கப்பட்டது. அன்று உஸ்மான்(ரழி) அறையில் நுழைந்து அவரது தலையில் அடித்தார்கள். அவர்களின் மனைவி நைலா அவர்கள் கணவன் மீது விழுந்து அவர்களை பாதுகாக்க முயன்றார்கள். கலகக்காரர்களின் வாள் வீச்சில் அவரது விரல்கள் துண்டாகி விழுந்தன. உஸ்மான்(ரழி) அவர்கள் மேல் விழுந்து பாதுகாத்த மனைவியை அப்புறப்படுத்திவிட்டு உஸ்மான் (ரழி) அவர்களை கலகக்காரன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் ஆட்கள் சரமாரியாக தாக்கி கொன்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை துல்ஹத் 18 ஹிஜிரி 35.

“அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாவான்’ என்ற 2:137 வசனத்தை ஓதிய நிலையில் உயிர் பிரிந்தது. இன்னாலில்லாஹீ… உஸ்மான்(ரழி) அவர்கள் இறந்து மூன்று நாட்களான பின்பும் அவர்கள் ஜனஸாவை அடக்கம் செய்யவிடாமல் வீட்டை சுற்றி முற்றுகையிட்டனர். உடலை குளிப் பாட்ட தண்ணீர் இல்லை. பிறகு இருள் சூழ்ந்த பிறகு சிலரின் உதவியுடன் உடலை தூக்கி வந்தனர். ஜனஸாவை சுமக்க சந்தூக் இல்லை. அடக்கம் செய்யப் போவதை அறிந்த கலகக்காரர்களில் சிலர் ஜனஸாவின் மீது கல்லெறிந்தார்கள். பின்பு அவரது உடல் “பகீ அல் கர்க்கத்’ எனும் அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் கூடிய அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் ஆட்கள் முஸ்லிம்களை அடக்கும் கபர்ஸ்தானில் இவரை அடக்கக் கூடாது என்று மீண்டும் கலவரம் செய்தனர். பிறகு வேறு வழியின்று உஸ்மான்(ரழி) அவர்களின் உடல் முஸ்லிம் கபர்ஸ்தானிற்கு அருகிலிருந்த யூதர்களின் அடக்கஸ்தலமாகிய “ஹுஷ் கவ்கப்’ என்ற இடத்தில் அவசர அவசரமாக அடக்கப் பட்டது’ ஆதாரம்: “மஹ்மூத் அஹ்மத் கழன் ஃபர்’ ரின் கலீபாக்கள் வரலாறு பக்கம் 384.

யார் இந்த உஸ்மான்(ரழி) அவர்கள்?
இஸ்லாத்தை தழுவிய முதல் நால்வரில் ஒருவர்; நபி(ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்த மருமகன். அல்லாஹ்வின் பாதையில் தன் செல்வங்களை செலவிட்டவர். சுவனத்திற்கு நன் மாராயம் கூறப்பட்டவர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஆட்சித் தலைவரின் உடல் அடக்கம் இந்தளவிற்கு மோசமாக போனதற்கு யார் காரணம்? காலமெல்லாம் முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு குரல் கொடுத்து தம்மையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த தலைவர் தமது இறுதி இருப்பிடத்தை யூதர்களின் சமாதிகளுக்கு மத்தியில் அமைத்துக் கொண்ட தால் சத்தியம் தோற்றுவிட்டதா? முதல் பிரிவினைவாதி அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் கலகம் ஜமாஅத்திற்கு அல்லாஹ்வின் அருள் இருந்ததா? அல்லது முஸ்லிம்களுக்குள் பிரிவினை வந்து விடக்கூடாது என்று மெளனம் காத்து மரணத்தை தழுவிய உஸ்மான்(ரழி) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் இருக்கிறதா?

இவ்வுலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை, கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ்வின் அருள் தங்கள் பக்கம் இருக்கிறது என்று பொய்யன் ஜெய்னுலாப்தீன் தம்பட்டம் அடிப்பது அறிவீனம். டில்லி தர்பாரில் இந்தியப் பிரதமர் பக்கத்தில் விசேச ஆசனத்தில் அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் அருள் கிட்டிவிட்டதாக ஆனந்தப்படுவது அறியாமையின் உச்ச கட்டம்.

PJ யின் முன்னோர் முத்தஸீலா ஆலிம்கள்
தன் அற்ப அறிவை சரி கண்டு குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் சுயவிளக்கம் கொடுத்து மக்களை வழி கெடுக்கும் PJயின் முன்னோர்கள் முத்த ஸீலாக்கள். அப்பாஸிய கலீபாக்கள் ஆட்சியில் மன்னர் மாமுனிடம் (ஹிஜ்ரி 218) தங்கள் வாதத் திறமையால் “குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற கருத்தை நிலை நாட்டினார்கள். குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறிய இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் போன்றவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். ஆட்சி அதிகாரம் செலுத்திய முத்தஸீலாக்கள் மீது அல்லாஹ்வின் அருள் இருந்ததா? சிறையில் சித்ரவதை அனுபவித்து “குர்ஆன் இறக்கப்பட்டது’ என்று கூறிய இமாம் அஹ்மது பின் ஹம்பல் மீது அல்லாஹ்வின் அருள் இருக்கிறதா?

நபி(ஸல்) அவர்கள் கூறினர். “இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பச் செல்லும். அந்த குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்குச் சுபம் உண்டாகட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.

பொதுவாக அனைத்து பொய்யர்களும் உலக ஆசை காட்டியே மக்களை தம் பக்கம் இழுத்து கூட்டம் சேர்த்து நரகக் குழியில் தள்ளுவார்கள். அதற்கு ஷைத்தானும் துணை போகிறான். முதல் பொய்யன் முஸைலிமாவும், ஐவேளை தொழுகையை மூன்றாக குறைத்தும், ஜகாத் தேவையில்லை என்று சலுகை காட்டியே கூட்டத்தை சேர்த்தான். தமிழ்நாட்டு பொய்யன் ஜெயினுலாப்தீனும் “ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்று மக்களுக்கு சலுகை செய்தும், முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்று ஆசை வார்த்தை காட்டி கூட்டம் சேர்க்கின்றார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை.

ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்த இப்லீசின் வழியிலேயே அவனது ஏஜண்டுகள் ஆள் பிடிக்க அலைகிறார்கள். இவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? பொய்யன் முஸைலிமாவிற்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடித வரிகளை பொய்யன் ஜெயினுலாப்தீனுக்கு சமர்ப்பிப்போம்.

“இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது’.

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை மனதில் கொண்டு செயல்படுவோம். “ஒருவருக் கொருவர் நன்மையை ஏவுங்கள், தீமையிலிருந்து தடுங்கள். இறுதியில் (மக்களிடம்) கஞ்சத்தனம் கோலோச்சுவதையும் மன விருப்பம் பின்பற்றப்படுவதையும், உலக ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஒவ்வொருவரும் தத்தமது கருத்தையே மெச்சிக் கொள்வதையும் கண்டால், அப்போது உன்னை மட்டும் நீ காப்பாற்றிக்கொள், பொது மக்களை(ப் பற்றி கவலைப்படுவதை) விட்டுவிடு. அறிவிப்பவர்: அபூ ஸஅலபா அல்கு னீ(ரழி) அபூதாவூத். இப்னுமாஜா.

இவ்வுலகில் கிடைக்கும் பண பலம், ஆள்பலம், பட்டம், பதவி, செல்வாக்கு, பெருங்கூட்டம் இவற்றைக் கொண்டு தாம் நேர்வழியில் இருப்பதாகப் பெருமை பேசுபவர்களின் உண்மை நிலையை அறிய 5:100, 6:116, 11:15,16, 23:52-56, 35:5,6,7 43:33-35, 57:20 ஆகிய பதினாறு(16) இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறியவும். அல்லாஹ் அருள் புரிவானாக!
-S.ஹலரத் அலி, ஜித்தா.
தகவல் : அந்நஜாத். http://www.annajaath.com/?p=4544

0 comments:

Post a Comment