Wednesday, September 22, 2010

நேரடியாக விவாதிக்க தயாரா? பி.ஜே.வுக்கு சிறைவாசிகள் பகிரங்க சவால்.

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள சகோதரர் பி.ஜே.அவர்களுக்கு,
தங்களின் ஆன்லைன்-ல் சிறைவாசிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு ,பொது மக்களிடம் திருவிடசெரி
சம்பவத்தால் ஏற்பட்ட அவப் பெயரை மறைத்து போலியான அனுதாபம் பெறவும்,
அல்லது மேற்கண்ட படுகொலை சம்மந்தமாக தாங்கள் பழி தீர்க்கபடலாம்
என அஞ்சி அதற்கென போலீஸ் பாதுகாப்பு பெற முடிவு செய்து நீங்கள் நடத்தும்
நாடகம் தான் என தங்களை நன்கரிந்தவர்களுக்கு தெரியும்.இதற்கு ஏன்
சிறைவாசிகளை வம்புக்கு இழுக்கின்றீர்கள்? உங்களால் உசுப்பேற்ற பட்டு ,
அதன் பலனால் பல வருடம் சிறை வாசத்தில் நொந்து போயிருக்கும் எங்களை
ஏன் மீண்டும் நொம்பல படுத்துகிறீர்கள்! உங்களைபோல் முஸ்லிம்களை கொல்ல
நாங்கள் முட்டாள்கள் இல்லை! மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து துரோகி என
அறியப்பட வேண்டுமே தவிர தியாகி என மரணித்து விட கூடாது.
நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் வரை அவர்களின் எந்த தோழரும் அவர்களை விட்டு
பிரிந்து செல்லவில்லை! நீங்கள் வாழும் போதே உங்களுக்காக உயிரை கொடுக்க
தயாராக இருந்த தோழர்கள் அனைவரும் வெளியேறி விட்ட அவல நிலை!
இது தொடரும்! இன்று உங்களோடு அறியாமல் உள்ள சகோதர்களும் விரைவில்
உங்களை பற்றி புரிந்து வெளியேறும் நிலை இன்ஷா அல்லாஹ் வரும்!
அன்று உங்களின் செயல்களுக்காக வருந்தி அழும் காலம் வரை நீங்கள் வாழ வேண்டும்! அனைத்திற்கும் காரணமான நீங்கள் உத்தமர் போல் தங்களை கட்டி கொள்வதேன்?
உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும்
நேரடியாக விவாதிக்க தயாரா? நீங்கள் விவாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம்!
ஆனால் எங்களிடம் சத்தியம் உள்ளது! இன்ஷா அல்லாஹ் அந்த பொது விவாதத்தில்
நீங்கள் சமுதயாத்திற்கு செய்த துரோகத்தையும் சிறைவாசிகளுக்கு இழைத்த
நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?
நேரடி சவால் காண;
http://www.youtube.com/watch?v=QqlPgwafxLs
.அப்துர்ரஹீம் ,ஏர்வாடி.காசிம், அலி அப்துல்லாஹ்.

0 comments:

Post a Comment