Wednesday, September 15, 2010

திருவிடைச் சேரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இதஜ நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!


திருவிடைச் சேரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இதஜ நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் சரகம் திருவிடைச் சேரியில் கடந்த 05.09.2010 அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மண்டலப் பொறுப்பாளர் ரஸுல் முஸ்தஃபா, நகர நிர்வாகிகள் அபிராமம் புதூர் ஷாஜஹான், கோரி முஹம்மது ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஜா முஹைதீன், ராமதாஸ், சந்தியாகு ஆகியோரை நேரில் கண்டு ஆறுதல் கூறினர். அவர்கள் பூரண குணமடைந்து அவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பிரார்தித்தனர்

0 comments:

Post a Comment