Tuesday, September 21, 2010

அன்புள்ள அண்ணனுக்கு!


அன்புள்ள அண்ணனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
தங்களை தவிர மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை! தங்கள் மர்கஸ் இல்லாத இடங்களில் மட்டும் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் தொழுவது கூடும்! மற்ற பள்ளிவாசல்களில் தொழுவது கூடாது! மற்ற முஸ்லிம்களை பின் பற்றி தொழுவது கூடாது ! தங்களை தவிர மற்ற கொள்கைவாதிகள் அனைவரும் வழிகேடர்கள்!பள்ளிவாசல்களில் ஜமாஅத்களில் ஏற்படுத்திய குழப்பங்கள்,சண்டைகள்,எஸ்.பி.பட்டினம் பள்ளியை தொழுகை நடை பெறாமல் பூட்ட வைத்த அநியாயம் ,மேலும் பல பள்ளிவாசல் அபகரிப்புகள், என அனைத்தையும் மறந்து இட ஒதுக்கீட்டை பெற கருத்து வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்களே வாருங்கள்! உங்களை காட்டி நாங்கள் அரசியல் ஆதாயம் பெற மாட்டோம் என நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நம்பி வந்த மக்களை ,கழுத்தறுக்கும் நயவஞ்சகனை போல் ,அந்த சுன்னத் ஜமாஅத் மக்கள் சுட்டுக் கொல்லப்பட காரணமான நீங்கள் , அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காமல், அதை மறைத்து ,மறுத்து தற்காப்புக்காக கொல்வதில் தவறில்லை என உங்கள் தொலை கட்சியில் வாதிட்டீர்கள்.ஆனால் உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன தமிழகத்தின் முன்னணி ஊடகங்களை உங்களின் அறியாதொண்டர்களை விட்டு மிரட்டியதோடு ,நாங்கள் பல லட்சம் மக்களை கூட்டும் இயக்கம் என இட ஒதுக்கீடிற்காக வந்த மக்களை உங்களின் கூட்டமாக காட்டி ஆதாயம் தேட பார்க்கின்றீர்கள்! அது மட்டுமின்றி மூன்றாம் தர ரவுடிகள் குற்றத்தை செய்து விட்டு அரசியல் வாதிகளின் நெருக்கத்தை காட்டி தப்பிப்பது போல் , பிரதமரே அழைத்து [?] பேசும் இயக்கத்தை பற்றி அவதூறு வெளியிட்டால் விளைவு என்னாகும் தெரியுமா? என கேவலமாக பிரதமரை இழுக்கின்றீர்களே ! சுன்னத் ஜமாஅதினரை சுட்டு கொல்வதற்க்கா ஜே.எம்.ஹாருன் உங்களை பிரதமரை சந்திக்க வைத்தார். இது போன்ற கேவலமான, மக்களை காட்டி நீங்கள் நடத்தும் மலிவான அரசியலை இனியேனும் நிறுத்தி கொள்ளுங்கள். இல்லையெனில் மறுமையில் அந்த மக்கள் கூட்டத்தின் முன் கேவல படுத்தப்படுவீர்கள். -இப்படிக்கு செங்கிஸ் கான்.

0 comments:

Post a Comment