Tuesday, September 28, 2010

குமுதம் ரிப்போர்ட் செய்தியும் கொதிப்படைந்த அண்ணனும்!..


திருவிடசேரி சம்பவத்தில் ஏற்கனவே தமிழக வெகு ஜன ஊடகங்களால் தன் முகத்திரை கிழிக்க பட்டதில் காயம் பட்டிருந்த அண்ணன் தற்போது தமிழகத்தின் பிரபல வார இதழான குமுதம் ரிப்போர்ட் செய்தியால் மேலும் கொதிப்படைந்து அண்ணன் ஆன்லைன்-ல் மீண்டும் உளறிக் கொட்டி இருக்கிறார்.

பாக்கர் மற்றும் ஜவஹிருல்லாஹ் மேல் வழக்கு தொடுப்பேன்! எனும் மிரட்டலோடு துவங்கும் விளக்கத்தில், திருவிடசேரி சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று சேதி வெளியிட்ட தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள்,இவரை கைது செய்ய சுவரொட்டி ஒட்டிய இயக்கங்கள், அணைத்து பள்ளிவாசல்களிலும் உரை மூலம் கொண்டு சென்ற உலமாக்கள் , சம்பந்தப்பட்ட திருவிடசேரி ஜமாஅத் அணைத்து பள்ளிகளுக்கும் எழுதிய கடிதம், அனைத்தையும் மறைத்து தமிழகத்தில் மேற்கண்ட இருவரை தவிர வேறு யாரும் குற்றம் சுமத்தவில்லை என்று ஒரு அப்பட்டமான பொய்யை எழுத அன்னனைதவிர யாரால் முடியும்?

மேலும் இவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லையெனும் செய்தி அணைத்து முஸ்லிம்களுக்கும் சென்றடைந்து விட்டதாம்! பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருட்டு என நினைக்குமாம்!

அடுத்து இவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லைஎன்பதில் காவல் துறை தெளிவாக உள்ளதாம்! அப்படியானால் கைதான டி.என்.டி.ஜே.வினரை வழக்கில் இருந்து விடுவித்து விட்டனரா?

மேலும் வழக்கு சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறதாம்! ஜாக்கிரதை சகோதரர்களே! காவல்துறையோடு கை கோர்த்து யாரையோ கை கழுவப் போகிறார்!
.அதுதான் 'காவல்துறை தெளிவாக உள்ளது'
'வழக்கு சரியான திசையில் செல்கிறது'என்று வாய் மாலம் செய்கிறார்.

அடுத்து யார் யார் கூடி எங்கு சதி செய்தனர் என்பதை ஆதாரத்துடன் காவல் துறையிடம் தெரிவித்து விட்டதாக கூறுகிறார். காவல்துறையிடம் ஆதாரத்துடன் சொன்னால் ஏன் சம்மந்த பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையிடம் சொன்னதை மக்களுக்கும் சொன்னால் சம்மந்தபட்ட்வர்களை மக்களும் புரிந்து கொள்வார்களே! அதை விடுத்தது பூடகமாக பட்ட பெயர் சொல்லி குறிப்பிடுவதால் சம்மந்தபடாத மற்றவர்களை சந்தேக படுவதில் இருந்து தவிர்க்கலாமே! அதை விடுத்து பொம்பள மாதிரி 'பொய்யன் பொய்யாசிரியர்' என பூடகமாக பேசுவது ஏன்? பாக்கரும்,ஜவாஹிருல்லாஹ்வும் நேரடியாக உங்கள் பேர் சொல்லி சொல்லும் போது உங்களுக்கு ஏன் பயம்? குரான் கூறுவது போல் 'நேரடியாக தெளிவாக சொல்லுங்கள்' நீங்கள் சொல்லுவது சத்தியம் எனில் உண்மையை போட்டு ஏன் உடைக்கவில்லை?

அடுத்து கடுகளவு சந்தேகம் இல்லாத நிலையில் தான் காவல் துறை பாதுகாப்பு அளிப்பார்களாம் ! இவருக்கு வழங்கபட்டிருக்கும் பாதுகாப்பு தான் கொலை சதிக்கு ஆதாரமாம்! இதற்கு முன்னர் அரசியல் வாதிகளின் பாதுகாப்பு பற்றி பேசியதை எல்லாம் நினைவு படுத்தி பார்த்தால் தேவலை!

ஒவ்வொருவரும தங்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என இப்போது கூறும் இவர் சில காலத்திற்கு முன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் ஏன் பாதுகாப்பு கோரக் கூடாது? என்ற கேள்விக்கு 'நமக்கு அல்லா தானம்மா பாதுகாப்பு! நான் நாலு பேரை பாதுகாப்புக்கு வைத்தால் அவன் பத்து பேர் வந்து கொன்னுட்டு போயிடுவான்! நான் பத்து பேரோடு சென்றால் ,அவர்கள் நூறு பேரோடு வந்து கொன்று விடலாம்! ராஜீவ் காந்தியை பாதுகாப்பில் இருக்கும் நிலையில் தான் கொன்றாகள்! இந்திரா காந்தியை பாது காவலர்களே கொன்றார்கள்' அப்படி கொலை செய்யபட்டால் அதை நாம் அல்லாஹ்வின் பாதையில் ஷஹித்ன்னு எடுத்துகொள்ள வேண்டியது தான் 'என்று பெரிய வியாக்யானம் பேசி விட்டு , இப்போ 'ஐயோ கொல்ல பார்க்கிறன்களே' என்று கூப்பாடு போடுவதேன்?

மேலும் ஜவஹிருல்லாஹ் மனித இனத்தை சேர்ந்தவரா? என சந்தேகம் வேறு! அது சரி சந்தேகம் எனும் வியாதி வந்து விட்டால் அப்படிதான் ! அனைவரையும் சந்தேக பட சொல்லும்!

இதில் தேர்தல் நேரத்தில் ம.ம.க.வுக்கு எதிராக தனி அக்கறை செலுத்தி தனி முடிவெடுக்க தவ்ஹீத் ஜமாஅத்க்கு எளிதக்கிவிட்டார்! என தன பிரச்சனையை வைத்து தான் இவர் சுய நலத்தோடு தேர்தல் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுப்பார் சமுதாய நலனை முன்னிறுத்தி முடிவெடுக்க மாட்டார் ! என்பதற்கு அவரே எழுத்து பூர்வமான ஆதாரம் தந்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்!

அடுத்து காசிமால் பாக்கர் சிறையில் தாக்கப்படவில்லை என்று நான் எழுதியது உண்மை என்பது உறுதியாகிறது' என பெருமிதம் வேறு! 'பாக்கரையும் ஹைதரையும் பாய்ந்து தாக்கினார் காட்டி கொடுத்தீர்கள் என்று கூறிக்கொண்டே நையப்புடைத்தார்' என இவர் கடந்த டிசம்பர் ஆறில் எழுதியது இன்னும் இவரது ஆன்லைன்-ல் இருக்கும் போதே அதை மறைத்து எப்படி எழதவும் பேசவும் முடிகிறது ?

அல்லாஹ்வின் அச்சம் குறைந்து விட்டால் அனைத்திற்கும் அஞ்ச நேரிடும் என்பதற்கு அண்ணனின் சமிபத்திய சம்பவங்கள் சான்று! இன்ஷா அல்லாஹ் சான்றுகள் தொடரும்...

0 comments:

Post a Comment