Saturday, September 4, 2010

கீழக்கரையில் இஃப்தார் நிகழ்ச்சி!

கீழக்கரையில் இஃப்தார் நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி சென்ற மாதம் 29.08.2010 அன்று கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக குழந்தை நல மருத்துவர்கள் ஜவாஹிர் ஹுஸைன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்புரையை இஸ்லாமிய அழைப்பாளர் கீழை புஹாரி அவர்கள், இஸ்லாம் அழைக்கிறது என்ற தலைப்பில் உரையாற்றினர். 220 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டம், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியினை கீழக்கரை கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment