Wednesday, September 15, 2010

திருக்குர்ஆன் பிரதிகள் எரிப்பை கண்டித்து இதஜ ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்களின் உயிருக்கு மேலாக நேசிக்கும் திருக்குர்ஆன் பிரதியை அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 11ஆம் தேதி எரிக்க போவதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண தேவாலய பாஸ்டர் ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
இதனால் உலகம் முழுவதும் மிகுந்த பரபரப்பு தொற்றியுள்ளது. இதை உலக முஸ்லிம்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றால் உலக நாடுகள் முழுவதும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது.
கீழ்தரமான இச்செயலை கடுமையாக கண்டித்தும், அதை தடுக்க கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் திடீர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.
அதை தலைமையேற்ற அதன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் மாநில நிர்வாகிள் முஹம்மது சித்திக்,சையத் இக்பால்,முஹம்மது ஷிப்லி,அபுபைசல்,வேளச்சேரி சிராஜ்,கலிமுல்லாஹ் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்கள் கைதாகி, விடுதலையாகினர். அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:

Post a Comment