அதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நேற்று (03.08.2010) இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கிளை அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பெருந்திரளாக கலந்துக்கொன்டனர் மாவட்ட தலைவர் ரஸுல் முஸ்தஃபா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். இந்நிகழ்வின் அதிரை இ த ஜ மவ்லவி முஹம்மத் யூஸுஃப் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சகோதர அமைப்புகள் பலஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . அனைவருக்கும் சிறப்பான வகையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன . விழாவின் இறுதியில் கோவை சிறைவாசிகள் விடுதலைக்கு உதவிவேண்டி விடுதலை பெற்ற சிறைவாசி வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு உதவித் தொகையினை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இஃப்தார் நிகழ்ச்சியை இ த ஜ கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். -அதிரை தமீம்.
0 comments:
Post a Comment