எங்கும் தஃவா! எதிலும் தஃவா! மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், போராட்டம் கருத்தரங்கம், அதிகாரிகள் அரசியல்வாதிகள் சந்திப்பு என அனைத்து மட்டத்திலும் மாமறை குர் ஆனை மக்களிடம் சேர்க்கும் வாய்ப்பாக கொண்டு செயல் படுகிறது!
இஸ்லாத்தை எடுத்து சொல்லும் அற்புதமான அழைப்பு பணியாக வாரந்தோறும் அரசு மருத்துவ மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி பழம் ,பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது நாம் அறிந்ததே!
அந்த வகையில். சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சேப்பாக்கம் லாக் நகர்.சேரி பகுதிகளில் உள்ள மக்களுக்கு (27 .02 .2011) ஞாயிறன்று மாநிலச் செ யலாளர் செங்கிஸ்கான் மற்றும் மா நிலச் பேச்சாளர் மசுதா ஆலிமா தலைமையில் பெண்கள் குழுவும் இணைந்து மக்களை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாஃவா செய்தனர். (அல்ஹம்துலில்லாஹ்)
0 comments:
Post a Comment