Monday, March 14, 2011

கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு - இதஜ அமைப்பு!




"எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும்" என இந்திய தவ்ஹீத் ஜமாத் ட்ரஸ்ட் அமைப்பின் மாநில தலைவர் பாக்கர் நெல்லையில் பேட்டியளித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் முஸ்லிம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்குச் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும். முஸ்லீம் சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏமாற்றப்பட்டு வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்குத் தமிழகத்தில் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு அளிக்கும்.
வக்பு வரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளைத் தேர்தல் வாக்குறுதியாக ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். இதற்காக வரும் 15ம் தேதி சென்னையில்  செயற்குழுக்கூட்டம் நடக்கிறது. இதன்பின்பு எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சேக்அப்துல்கபூர், மாவட்ட தலைவர் அலி முகம்மது, மாவட்ட துணை தலைவர் முகம்மது முனீர் ஆகியோர் உடனிருந்தனர்.

--

Thanks&Regards


 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                                

0 comments:

Post a Comment