Wednesday, March 30, 2011

இறக்கும் தருவாயிலும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.

மருத்துவமனை தஃவா மூலம் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.

வாரந்தோறும் அரசு மருத்துவனைகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல்   கூறுவதோடு  அவர்களை  நலம்  விசாரித்து  அவர்களுக்கு  இஸ்லாத்தை எத்தி   வைப்பதை  தங்களின்  அடிப்படை  பணியாக  INTJ செய்து  கொண்டுள்ளது.  இதன்  மூலம் ஏற்லமான  சகோதரர்கள்  இஸ்லாத்தின்  மீது  நல்லெண்ணம்  கொள்வதோடு , தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டும் வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று தஃவா பணியில் எடுபட்ட மதுக்கூர் மைதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவற்றுக் கிடந்த ஒரு சகோதரருக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது இந்த நிலையில் இறந்தால் எனக்கு இறைவன்  மன்னிப்பளிப்பானா ? என்று  கேட்டார் ! மன்னிப்போடு  மகத்தான சொர்க்கமும் கிட்டும் என சொன்ன போது 'அப்படியானால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் ' என்றார். உடனே அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப் பட்டு இஸ்லாத்தை ஏற்றார். இறக்கும் தருவாயில் இருக்கும் அவருக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!


    































0 comments:

Post a Comment