குரான் அறிமுக நிகழ்ச்சியான குன்றத்தூர் ரத்த தான முகாம் !
காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் நகர பெரியார் நகர் சார்பாக மற்றும் அரசு புறநகர் மருத்துவமனை இணைந்து கடந்த 27-02-2011 அன்று சத்திய மூர்த்தி கிளினிக் வளாகத்தில் இரத்த தான முகாமை நடத்தியது.
இதில் காஞ்சி மாவட்டப் பொருளாளர் முபாரக் அலி, காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் ஷரீப் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநிலப் பொருளாளர் அபு பக்கர் (தொண்டியப்பா) மற்றும் துணைத் தலைவர் எம்.ஐ. முஹம்மது முனீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமில் சுமார் 54 பேர் இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment