Wednesday, March 2, 2011

மன்னடி யில் மாபெரும் சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம்


மன்னடி யில் சமூக தீமை எதிர்ப்பு மாபெரும்  பொதுக்கூட்டம்                                                                                                                             விழி்த்து இருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக களப்பணியாற்றும் மக்கள் இயக்கமாக  தன்னைஅர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது.   சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும்விழிப்புணர்வு பரப்புரைகளை மாநிலம் முழுவதும் செய்து வருகிறது. 27 .02 .2011  ஞாயிறன்று மாலை மன்னடி யில் சமூக தீமை எதிர்ப்பு மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற்றது 








இதில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா வரதட்சனை ஒரு வன் கொடுமை என்ற தலைப்பில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் இஸ்லாமிய அரசியலும்  இன்றைய அரசியலும் என்ற தலைப்பில்  மாநில பொருளாளர் தொண்டியப்பா சமூக  தீமைகள் என்ற தலைப்பில் மாநில தலைவர்  எஸ்.எம்.பாக்கர் கோத்ரா ரயில் எரிப்பும் தீர்ப்பும் சதியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளானஆண்களும்  பெண்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

 அபூ ஆபிதீன்.


0 comments:

Post a Comment