சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!
களத்தில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.
சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக தொழுகைப் பள்ளி ஒன்று நடை பெற்று வருகிறது! அதை அந்த கட்டிட உரிமையாளர் பள்ளிக்கென வக்பு செய்து ,விற்றாலோ இல்லை அவரது வாரிசுகளோ உரிமை கொண்டாடக் கூடாது என சொல்லி தான் அந்த சொத்தை விற்றுள்ளார். ஆனால் வாங்கிய சீனிவாசன் எனும் தி.மு.க நபர் அதை மதிக்காமல் இரவோடு இரவாக தொழுகை பாய் , குரான் போன்றவற்றை தூக்கி எறிந்து பள்ளியை இடிக்க துவங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவருக்கம் தகவல் தர இ.த.ஜ வசென்னை மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் விஷயமறிந்த த.த.ஜ.SDPI த.மு.மு.க.சகோதரர்கள் அனைவரும் வர பொது மக்களோடு அனைவரும் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். நிலைமை
கேள்வி பட்டு எஸ்,எம்.பாக்கர் நேரடியாக களத்திற்கு சென்று உதவி ஆணையர் சேஷ சாயி அவர்களிடம் பேசினார். பின்னர் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மீண்டும் அசர் தொழுகை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது!
பாபர் பள்ளிக்கு பின் இனியொரு பள்ளியை இந்த சமுதாயம் தயாராக இல்லை என்பதையும் , அதற்காக கருத்து வேறுபாடு மறந்து அனைத்து இயக்கங்களும் கை கோர்த்து காலத்தில் இறங்குவார்கள் என்பதையும் நாட்டுக்கு எடுத்துரைப்பதாக இந்த சம்பவம் அமைந்தது!
களத்திற்கு வந்து மக்களை கட்டுப் படுத்திய பாக்கருக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். நீண்ட நாளுக்குப்பின் பாக்கரின் பேச்சுக்கு த.த.ஜ.வினர் உற்சாகமாக தக்பீர் முழக்கம் இட்டதும், அவரோடு கை குலுக்கி சலாம் சொன்னதும் நெகிழ்ச்சியான சம்பவம்.
0 comments:
Post a Comment