Tuesday, March 29, 2011

துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!


முன்னுரை; நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிக்க உள்ளதாம் தனிநபர் ஜமாஅத். அந்த திமுக அணியில் இடம்பெறுள்ள காங்கிரஸ் குறித்த தனிநபர் ஜமாஅத்தின் கடந்த சில மாத எழுத்துக்களை- தீர்மானங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஆனாலும் இவர்கள் மட்டுமே சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்ப வேண்டும் இல்லையேல் நீங்கள் தடம்புரண்டவர்களாகி விடுவீர்கள்;


17.10.2010 அன்று செங்கல் பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.
துரோகம் : 11949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 21989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்
துரோகம் : 31992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.
துரோகம் : 5பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.  

தீவுத்திடலில் 15 லட்சம் பேர்[?] கூடிய மாநாட்டில் தீர்மானம்;
இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது.
 .

காங்கிரஸின் தார்மீகக் கடமை
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமன்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.[2004தேர்தல்அறிக்கையில் சொன்னதை 2011வரை நிறைவேற்றாமல்  அல்வா கொடுக்கும் காங்கிரஸை   மீண்டும்                          ஆதரிப்பது ஒருபுறம்;   அதேபோன்று தேர்தல்  அறிக்கையில் பரிசீலிப்போம்   என்று மட்டும் சொல்லியுள்ள திமுகவை  ஆதரிக்கிறது தனிநபர் ஜமாஅத். காங்கிரஸ்  தந்த அல்வாவை தின்றபின்னும் தேர்தல் அறிக்கைஇல் சொல்லிவிட்டால் அது நம்பகமானது என தனது ரசிகர்களை  நம்ப வைக்கலாம். முஸ்லிம்களை நம்ப வைக்கலாமோ?]  

பிரதமர்-சோனியா சந்திப்பு முடிந்தவுடன் செய்த ஃபில்டப்;
பிரதமர், நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.
சோனியாகாந்தி, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.


கடந்த  06-07-2010 ல் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவாகி விட்டது. எத்தனை சதவிகிதம் என்பதில்தான் விவாதம்  நடக்கிறது என்று சோனியா சொன்னதாக  சொன்ன இந்த தனிநபர்ஜமாத்தினர், அந்த விவாதத்தை இன்னும் தொடரும் சோனியாவின் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்கிறார்களாம்.


ஆக பாபர் மஸ்ஜித் விசயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, இட ஒதுக்கீடு விசயத்தில் இன்றுவரை ஏமாற்றும் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்க கிளம்பி விட்டது இந்த சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தும்[!?] தனிநபர் ஜமாஅத்.


ஒருவேளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் வேறு; தமிழ்நாட்டில் இப்போது போட்டியிடும் காங்கிரஸ் வேறோ என்னவோ? அல்லது காங்கிரஸை நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில்   பார்த்துக்கொள்வோம் என்று வாய்ச்சவடால் அடிக்கப் போகிறார்களா? 


அதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுவிட்டு, பிறகு கொல்லைப் புறமாக மாவட்ட முடிவு- மண்ணாங்கட்டி முடிவு என தீவிரமாக காங்கிரஸை ஆதரித்ததையும் முஸ்லிம்கள் மறக்கவில்லை.


ஆயிரம் துரோகங்களை முஸ்லிம்களுக்கு செய்தாலும் அன்னை சோனியாவை ஆதரிப்போம். ஆனால் மறந்தும் கூட முஸ்லிமான மமகவை மன்னிக்கவே மாட்டோம்.
நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே சமுதாய  காவலர்கள்[?!].

0 comments:

Post a Comment