Sunday, March 13, 2011

வரலாற்றில் ஒரு சாபக்கேடு !


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

                         வரலாற்றில் ஒரு சாபக்கேடு! 
 
     லைப்பைக் கண்டவுடன் தடுமாற்றம் கொள்ளாதீர்கள்.தர்க்கம் புரியாதீர்கள்.
எந்த வரலாற்றுக்கு கேடு உருவாகி விட்டது என அங்கலாய்க்காதீர்கள். தனி மனித வழிபாடு   எனும் தரங்கெட்ட தத்துவத்திலிருந்து நீங்கி   நடுநிலை எனும் நற் சிந்தனையுடன் இதனைப் பாருங்கள்.வரலாற்றைக் கெடுத்த அந்த கேடு கெட்டவர்களை   அடையளங் காணுவீர்கள்! இன்ஷா அல்லாஹ்
 
     இலங்கையின் ஏகத்துவ எழுச்சிக்கென்று சிறப்பானதோர் வரலாறு இருந்து வருவது இமாலய உண்மையாகும்.தமிழ்நாடு தவ்ஹீத் எழுச்சியை விடவும் முப்பது ஆண்டுகள் முதிர்ச்சி பெற்ற இலங்கையின் ஏகத்துவ எழுச்சின் வரலாற்றுக்குத்தான் கேடு விளைவிக்க சில (P)புரியாத (J)ஜென்மங்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
     
ஆம்! இதுகாலம் வரைக்கும் இலங்கையின் ஏகத்துவ வரலாற்றில் குர்ஆன்,நபிவழி மட்டுமே மார்க்கத்தின் மூலாதாரம் என்று ஆணித்தரமாக போதிக்கப்பட்டு வந்தது.இந்த களங்கமற்ற வரலாற்றில் களங்கம்  ஏற்படுத்த முயலும் டி.என்.டி.ஜேயின் இலங்கை ஆதரவாளர்கள், தங்களால் ஒருங்கிணைக்கப்பட்டதாக(?) கூறப்படும் மாளிகாவத்தை மையவாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்.எல்.டி.ஜே இயக்கம்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கு ஏற்பவும், டி.என்.டி.ஜே கொள்கைக்கு உட்பட்டதாகவும் செயல்படும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதன்  மூலம் குர்ஆன்,ஹதீசுடன் சேர்த்து  டி.என்.டி.ஜே கொள்கை என்ற மூன்றாவது மூலாதாரத்தையும் மூர்க்கத்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளதை  வரலாற்றில் ஒருசாபக்கேடு  என்றுதானே சொல்லவேண்டும்?   
    
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது,"SLS.ISO-9000 தரம் பெற்ற ஒரே உற்பத்தி " என்றுதேயிலை  வியாபாரத்திற்கு விளம்பரம் செய்வது போல,"இலங்கையில் டி.என்.டி.ஜே கொள்கைக்கு உட்பட்ட ஒரே அமைப்பு " என்று அறிஞர் பீ.ஜே யின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளம்பரம் செய்யும் இவர்களின் இயக்க வெறியைக் காண வேடிக்கையாகவும்,வேதனையாகவும் உள்ளது.
     
    நமது நாட்டில் மத்ஹப்வாதிகள்,தரிக்காவாதிகள் கூட தங்கள் அமைப்புகளை "இந்த கொள்கைக்கு உட்பட்ட அமைப்பு,அந்த கொள்கைக்கு உட்பட்ட அமைப்பு"என்று  விளம்பரம் செய்வதில்லை. ஆனால்,நாங்கள் தான் அப்பழுக்கற்ற ஏகத்துவவாதிகள் என்று கூறி,புருவத்தை உயர்த்தி சுய புகழாரம் சூட்டிக்கொள்ளும் இவர்கள் தமது அமைப்பை  தமிழ்நாட்டுக்கு அடகு வைத்துள்ள கேடு கேட்ட செய்தியை தொலைக்காட்சி வழியாக அம்பலப்படுத்தும்  அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளமை துக்ககரமான நிகழ்வு என்றால் அது மிகையாகாது.
   
 எஸ்.எல்.டி.ஜே வை வழிகேடு என்று பிரகடனப்படுத்துவதற்கென்றே சைபுல்லாஹ் காஜாவை இலங்கைக்கு தருவித்து,எல்பின்ஸ்டன் அரங்கில் எஸ்.எல்.டி.ஜேவை வழிகெட்ட ஜமாஅத் என்று இந்த வடிகட்டிய முட்டாள்கள் அறிவித்தபோது ரத்தம் கொதிப்பதாகக்கூறி கொதித்தெழுந்த எஸ்.எல்.டி.ஜே வின் மூத்த உறுப்பினர்கள் இப்போது  சத்தமில்லாமல் அங்கே சங்கமம் ஆகியிருக்கும் சங்கதிதான் அதிசயத்திலும் அதிசயமானது.
     
முதலில் எஸ்.எல்.டி.ஜே தான் நேர்வழி கொண்ட ஜமாஅத்! பிறகு அது வழி கெட்ட ஜமாஅத்!! இப்போது மீண்டும் அது நேர்வழி கொண்ட ஜமாஅத்! பின்னர் எப்போது அது வழிகெட்ட ஜமாஅத் ஆகுமோ?! சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் கீரியை உடும்பு என்பது! சாப்பிடத் தேவையில்லையென்றால் உடும்பை கீறி என்பது!! எப்படி இருக்கிறது டி.என்.டி.ஜே கோட்பாடு? 
        
எஸ்.எல்.டி.ஜே வை சைபுல்லாஹ் காஜா வழிகேடு என வாய் கூசாமல் கூறிய வேளையில்  உண்மையிலேயே எஸ்.எல்.டி.ஜே வழி கெட்டுப் போய்த்தான் இருந்தது என்றும் சைபுல்லாஹ் காஜாவின் அப்போதைய பத்வாவில் எந்தத் தவறும் இல்லை என்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்.எல்.டி.ஜே வின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளத் தயாரா? நாமும் பகிரங்கமாக சவால் விடுகிறோம்.
        
அண்ணன் பீ.ஜே ஆரம்பித்த எஸ்.எல்.டி.ஜே மிகவும் சிறப்பாக இயங்கி வந்தபோது,அவர் காரணங்கூறாமலேயே அதிலிருந்து விலகிச்சென்று,சுக்கு நூறாக்கி மூன்று வருடங்களுக்குள் மூன்றாகப்  பிரித்து, மூன்று ஜமாஅத்துகளை உருவாக்கி,அந்த மூன்றையும் முகவரி இல்லாமலாக்கி,மனநிலை பாதிப்புக்குள்ளான அந்த முப்படைத் தளபதிகளுடன் மானங்கெட்டு மீண்டும் கை கோர்த்துக்கொண்டு இவர்கள் களமிங்கி 
ள்ளதை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று சாதனைப் புத்தகத்தில் பதிந்துதான் ஆகவேண்டும். 
         
 ஏதோ டி.என்.டி.ஜேவின் அங்கீகாரம் என்பது  சுவனப்பிரவேசத்துக்கான டிக்கெட்டைப் போலவும்,அதனை இவர்கள் தமது பாக்கட்டில் வைத்திருப்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

சிங்காரச் சென்னையின் சிலோன் சீதேவிகளே....! 
டி.என்.டி.ஜே வின் கொள்கைக்கு உட்பட்ட ஒரே அமைப்பினராகிய உங்களிடம் டி.என்.டி.ஜே கொள்கை என நீங்கள் குறிப்பிடுவது எதனை என்று வினவுகிறோம்?

* பேருவளைச் சம்பவத்தில் காயமடைந்த சகோதரர்களின் சிகிச்சைக்காக ஒரு தனவந்தர் டி.என்.டி.ஜே தலைமையிடம் ஒப்படைத்த ருபாய் 10 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்காமல் ஏப்பம் விட்டது டி.என்.டி.ஜே கொள்கையா?
(விபரம் அறிய பேருவலையை அணுகவும்) .

* சிகிச்சைக்காக தமிழ்நாடு வந்தவர்களுக்கு  சகோதரர் எஸ்.எம்.பாக்கர் உதவிக்கரம் நீட்டியதை ஜீரணிக்க முடியாமல், "பாக்கர் எந்த உதவியும் செய்யவில்லை என்று பொய் பொய்யாகப் பேட்டி கொடுத்தால்தான் 10 லட்ச்சத்தைத் தருவோம்" என்று கேமராவுடன் வந்து அயோக்கியத்தனம் பண்ணியது டி.என்.டி.ஜே கொள்கையா?

* டி.என்.டி.ஜே தலைமைக்கு தொழுகைக்காக வந்த செங்கிஸ்கான் என்ற சகோதரரை காவல்துறையிடத்தில்,"இவர்கள் தொழ வருவது அச்சுறுத்தலாக உள்ளது"எனப் புகார் அளித்த கல் நெஞ்சுச் செயல் டி.என்.டி.ஜே கொள்கையா?

*  `இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்' என்று பிற  மதத்தவருக்கு இஸ்லாமிய போதனை
 செய்துகொண்டு,வீட்டு மருமகளாக இஸ்லாதில் நுழைய விரும்பிய இந்துப் பெண்ணின் ஹிதாயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட முட்டாள்தனம் டி.என்.டி.ஜே கொள்கையா?

*  கேள்வி கேட்டவர்களிடம், " எனது மகன் இஸ்லாமிய வரையறைகளை மீறாமல்(?!) காதலித்தது உண்மைதான்" என்று கூறி கண்றாவித்தனதுக்கு இஸ்லாமிய வரையறையிட்ட வஞ்சத்தனம் தான் டி.என்.டி.ஜே கொள்கையா?

*  உலகுக்கே உபதேசம் செய்யும் உத்தமருக்கு(!) தொழக்கூட நேரமில்லையாமே...? இதுதான் டி.என்.டி.ஜே கொள்கையா?

*  இரண்டு வருடமாக இயங்கி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு குழப்பம் விளைவித்தது மட்டுமில்லாமல்,இ.த.ஜ.மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு,இ.த.ஜ வின் பணிகளை முடக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று,அதை சரியாக டிசம்பர் 5 தேதி காவல்துறையிடம் காட்டி,டிசம்பர் 6 ஆம் தேதி இ.த.ஜ.நடத்தி(க்காட்டி)ய பாபரி மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை தடுக்க முனைந்த சமுதாய துரோகம்தான் டி.என்.டி.ஜே.கொள்கையா?

*  உங்கள் தடுப்புகளையும் தாண்டி போராட்ட முன்னெடுப்புகளோடு களம் கண்ட இ.த.ஜ வினரை,"(நீதிமன்ற ஆணையை மீறிவிட்டார்கள்.அதனால்)தண்டிக்க வேண்டும்"  என்று மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பேடித்தனம்தான் டி.என்.டி.ஜே கொள்கையா?       

 *  வெளிநாட்டு நிறுவனங்களை விமர்ச்சித்துக்கொண்டே டி.என்.டி.ஜே பிரச்சாரகர் பேருவளை மகொடே பள்ளிவாசலில் மூன்று மாதம் சம்பளம் வாங்கினாரே அது தான் டி.என்.டி.ஜே.கொள்கையா?  

இலங்கையில் இயங்கும் சில நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்படுகிறார்கள் என்று விமர்சித்த இந்த (P) புத்தி (J)  ஜீவிகளிடம்(?) ஒரு விடயத்தை வினவ வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டின் இலங்கையர்களே....

இந்த நிறுவனங்களாவது வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதற்காக  கட்டுப்படுகிறார்கள்.நீங்களோ  தமிழ்நாட்டுக்குப் பணம் கொடுத்துக் கொண்டு கட்டுப்படுகின்றீர்களே?எடுத்துக்கொண்டு கட்டுப்படுவதை விடவும் கொடுத்துக்கொண்டு கட்டுப்படுவது வெட்கங்கெட்ட செயலாகப்படவில்லையா?(எஸ்.எல்.டி.ஜே வின் அங்கத்துவப் பத்திரம் (உறுப்பினர் படிவம்)கூட அங்கப்ப நாய்க்கன் தெருவில் தான் அச்சடிப்பார்களாம் )
   
நல்ல மனதே  இல்லாத இவர்கள் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார்களாம் !அதனடிப்படையில்,எஸ்.எல்.டி.ஜேவினர்  எந்த ஒரு அமைப்பையும் (டி.என்.டி.ஜே தவிர )மேடை ஏற்ற மாட்டார்களாம்!அவர்களும் மேடை ஏற மாட்டார்களாம்!! இதிலாவது இவர்கள் முரண்படாமல் இருந்திருக்கலாம்.ஆனால் சென்னை தீவுத்திடலில் இட ஒதுக்கீடு  மாநாட்டை நடத்திய மண்ணடி சிங்கம்- மன்மோகன் சிங்கை சந்திக்க ஹரூன் எம்.பியுடன்தான் தில்லிக்குப் போனார்.  இந்த ஹரூன் எம்.பி.யார் தெரியுமா?தன்னை ஒரு கபுர் வணங்கி என்று பகிரங்கமாக இவர்களின் மாநாட்டிலேயே பேசியவர்! (ஹரூன் பேசிய சி.டி கைவசம் உள்ளது ஆனால் பிளக் மெயில் செய்யமாட்டோம்) இந்த முஷ்ரிக்குடன் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரை சந்திப்பார்களாம் ஆனால் தவ்ஹீத் உலமாக்களுடன் மட்டும் அவர்கள் டி.என்.டி.ஜே கொள்கையை ஏற்காத ஒரே காரணத்திற்காக ஒன்றாக மேடை ஏற மாட்டார்களாம்! டி.என்.டி.ஜே வின் இந்த கறை படியாத கட்டுக்கோப்பிற்கு `ஓ' போட்டுத்தான் ஆகவேண்டும்.இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? தில்லி மேட்டர் என்பதால் கிள்ளிக்கொண்டு கிடக்க வேண்டாம் என்பார்களா? இல்லை தொண்டி அண்ணன் மேட்டர் என்பதால் கிண்டிக்கொண்டு கிடக்க வேண்டாம் என்பார்களா?  

தமிழ்நாட்டுத் தவ்ஹீதின் ஈழத்து இதயங்களே...! மல்லிகாராம தவ்ஹீத் பள்ளிவாசலை எஸ்.எல்.டி.ஜே அமைப்புக்கு உயில் எழுதாமல் "ட்ரஸ்ட் " என்ற பெயரில் குறிப்பிட்ட சில நபர்களின் பொறுப்பில் எழுதியதற்க்காகத்தான் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறினீர்கள்.உங்கள் வேண்டுகோளின்படி ட்ரஸ்ட்க்கு எழுதாமல் எஸ்.எல்.டி.ஜே அமைப்புக்கு எழுதினாலும்  அதுவும் குறிப்பிட்ட சில நபர்களின் பொறுப்பில் தான் எழுதப்படும் என்கிற சராசரி உண்மையைக்கூட உங்களால் உணர முடியாதுள்ளதே? பொதுச் சொத்துக்களை ட்ரஸ்டுக்கு எழுதுவது மோசடி என்றால் டி.என்.டி.ஜே யின் சொத்துக்கள் பலவற்றை `முஸ்லிம் ட்ரஸ்ட்'க்குஎழுதி வைத்து அந்த ட்ரஸ்டின் ஆயுட்கால தலைவராக அண்ணன் அவர்கள் இருந்து வருகிறார்களே... அப்படியாயின், இது ஆயுட்கால மோசடியல்லவா? இல்லை அண்ணன் மேட்டர் என்பதால் இதற்கு அப்பீல் இல்லையா?
       
மல்லிகாராம பள்ளிவாலை எஸ்.எல்.டி.ஜே க்கு எழுதாததால் அங்கிருந்து வெளியேறிய தாவா களத்தின் கலங்கரை விளக்கங்களிடம் ஒன்றை வினவ வேண்டியுள்ளது. நீங்கள் மாளிகாவத்தையில் புதிதாக வாங்கிய கட்டடத்தை எஸ்.எல்.டி.ஜே வின் பெயரிலா  எழுதியுள்ளீர்கள்? அக்கட்டடம் ஒரு கோடீஸ்வரரின் பெயரில் எழுதப்பட்டுள்ளது என்கிற மறைக்கப்பட்ட உண்மையை உங்களால் மறுக்க  முடியுமா? உங்களின் விடாப்பிடியான கொள்கைப்பிடிப்பு(?) கோடீஸ்வரர் விஷயத்தில் மட்டும் புசுவானமாயப்போனது ஏனோ? 
        அடுத்து, ஒரு ஆலிமை தனது மனைவியை வைத்தே வார்த்தை விபச்சாரம் செய்யத் தூண்டி,சாட்டிங்கில் செட்டிங் செய்து, அதனை சி.டி க்களில் பதிவு செய்து,அந்த ஆலிமை தாவாவிலிருந்து ஒதுங்காவிட்டால் சி.டி யை வெளியிடுவோம் என்று பிளாக் மெயில் செய்யும் இந்த மூன்றாம்தர முகல்லிதுகளிடம் நாம் இன்னுமொரு விடயத்தை கேட்க வேண்டியுள்ளது.

        குற்றம் புரிந்த பிரஸ்தாப ஆலிம்,தான் ஷைத்தானின் தூண்டுதலினால்(சொந்த மனைவியை செட் அப் செய்த அந்த மனித ஷைத்தான் டி.என்.டி.ஜே இலங்கையின் முன்னாள் தலைவரும்,உங்கள் மேலான்மைக்குழுவின் இந்நாள் உறுப்பினர் எனவும் கேள்விப்பட்டோம்!இந்த மேலாண்மைக்குழு உறுப்பினரின் மேலான ஆண்மையில் கோளாறு இருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது)செய்த தவறை ஊர் அறிய-உலகறிய ஏற்றுக்கொண்டு அதற்காக  இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு விட்டதாக பகிரங்கமாக கூறிய பின்பும்,அவரை தாவா பணிகளிலிருந்து விலகச்சொல்ல நீங்கள் யார்? 

ஒரு முஸ்லிமின் மானத்துடன் விளையாடும் மனித ஜடங்களான உங்களுக்கு தாவா பணிகளிலிருந்து ஒருவரை விலகச்சொல்லும்  அதிகாரத்தை தந்தவர்கள் யார்?குரான்,நபிவழிகளில் என்றால் இதற்கு ஆதாரம் காட்டவே முடியாது என்பதற்க்காகத்தான மூன்றாவது மூலாதாரமான டி.என்.டி.ஜே கொள்கையை வேதமாக சுமந்துள்ளீர்கள்?

முடியுமானால் டி.என்.டி.ஜே யின் மேலப்பாளையம்  கிளைத்தலைவர் ரகசியமாக எடுத்த இளம் பெண் குளிக்கும் வீடியோ படக்  காட்சியை,`பாளையத்து லீலை' என்று காமரசம் சொட்டும் தலைப்பிட்டு சி.டி க்களாக வெளியிடுங்கள். அல்லது  முதுகெலும்பு இருந்தால் டி.என்.டி.ஜே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கடையநல்லூர் மதரசா மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டதேன் என்கிற மேலான(?) செய்தியை கடையநல்லூரா? காடையர் நல்லுரா? எனத் தலைப்பிட்டு சி.டி க்களாக வெளியிடுங்கள்! அதன் பிறகு இலங்கை ஆலிமின் சி.டியை பகிரங்கப்படுத்துவது பற்றி ஆலோசிக்கலாம்.

தேவைப்படும்போதெல்லாம் பாக்கரின் பஸ்ஸில் ஏறிக்கொண்டு அடுத்தவன் மானத்துடன் விளையாடுவதையே அன்றாட வாடிக்கையாகக் கொண்ட உங்களுக்கு மேலப்பாளையம்,கடையநல்லூர் முடை நாற்றம் எல்லாம் மூக்கிற்குள் நுழையாதது வேடிக்கை தான்.

தமது அமைப்பைத் தவிர எல்லோரையும் வழிகேடர்கள் எனக் கூறிக்கொண்டு வழிகெட்ட புத்தளம் உமர் அலியின் கொள்கையை தவறு என விமர்ச்சித்த-விவாதித்த பி.ஜே யின் அங்கீகாரத்துடனேயே இன்று டி.என்.டி.ஜே தவிர அனைத்தும் வழிகேடு என இவர்கள் அப்பட்டமாகக் கூறி வருவது வியத்தகு விடயமாக உள்ளது.(மதரசா மாணவர்களை வைத்து வழிகேடு பத்வாவை எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் பண்ணுகிறார்களாம்)
    
தமது அமைப்பினரைத் தவிர மற்றவர்களெல்லாம் வழி கேடர்கள் என்றால், ,அவர்களுடன் மேடையேறுவதை மட்டும்  வழிகேடு என மொட்டையாக கூறாமல் அவர்களின் ஜனாசாக்களில் கலந்து கொள்வது,அவர்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது அவர்களது ஜமாத்துடன் தொழுவது,ஏன் அவர்களிடம் நன்கொடை வசூலிப்பது எல்லாமே வழிகேடு என்று துணிகரமாக அறிவிக்காமல் இருப்பது ஏன்? 

கொண்ட கொள்கையில் கூட பிடிப்பு இல்லாமல் அரைகுறை பத்வாக்களை வழங்காமல் உங்கள் முதுகெலும்பில்லா பத்வாக்களையாவது முழுமையாக வழங்க முன்வாருங்கள் என்று அரண்மனைக்காரன் தெரு அறங்காவலரிடம்  அன்பாய் வேண்டுகிறோம்.

அன்புக்குரிய இலங்கையின் தமிழ் நாட்டுக்காரர்களே... 
தனி மனித வழிப்பாட்டை தரை மட்டமாக்கிய தவ்ஹீத் புரட்சியின் தன்னிகரற்ற வரலாற்றில் தனி மனித பூஜையை புகுத்தி அந்த வரலாற்றில் புரட்டப்பட வேண்டிய ஏடுகளை கேடுகளாக மாற்ற வேண்டாம் என்றும்,இயக்க வெறியர்களாக இல்லாமல் இஸ்லாமியப் பிரியர்களாக மாற முயற்சியுங்கள் என்றும்,இனியும் மண்ணடி மைனர்களிடம் மண்டியிடாமல் அழைப்புப்பணி செய்ய முன் வாருங்கள் என்றும்,ஏகத்துவ உணர்வோடு (இவை உங்கள் பத்திரிகைகளின் பெயர்களல்ல) வேண்டி  விடை பெறுகிறோம்.

இவ்வண்ணம் , 
நீங்கள் யார் என்று நினைக்கிறீர்களோ அவர்கள்!

(அடக்கி வாசித்தால் அளவு கடந்து அட்டகாசம் புரிகின்றீர்கள் என்பதால் உங்கள் அசிங்கங்களை விருப்பமின்றியேனும் அரங்கேற்ற நேரிட்டது என்பதை கவலையுடன் அறியத்தருகிறோம்.விட்டு விட்டால் விட்டு விடுவோம் இன்ஷா அல்லாஹ்.
தொடர்பு மின்னஞ்சல்:annan-aniyayam@gmail.com    
    

0 comments:

Post a Comment