Monday, January 24, 2011

திரிசூலத்தால் குத்தப்பட்ட முத்தவல்லி மகன் ! இந்துத்வா வெறியாட்டம்! INTJ ஆர்பாட்டம்.


திரிசூலத்தால் குத்தப்பட்ட முத்தவல்லி மகன் !
இந்துத்வா வெறியாட்டம்! INTJ ஆர்பாட்டம்.     

220120118473.jpg
220120118474.jpg
220120118476.jpg
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை  சேர்ந்த மில்லத் நகர் பள்ளி வாசல் , பின்புறம் கோயில் ஒன்று உள்ளது .இதில் நடக்கும் நிகழ்சிகளின் பொது இந்து முன்னணி குண்டர்கள் வம்பிழுப்பது வாடிக்கை.  பல சமயங்களில் வாய் சண்டையாக் இருந்த இந்த 
மோதல்,  கடந்த 21.1.11 அன்று   மேற்படி பள்ளியின்  முத்தவல்லி சலஹுதீன்  வீடு புகுந்து தாக்கும் அளவிற்கு வெடித்துள்ளது!

சலஹுதீனின் வீடு புகுந்து தாக்கிய இந்துத்துவ வெறியர்கள் , பெண்கள் முதியவர்கள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர்! முத்தவல்லி மகன் சமியுல்லாஹ்வை திரிசூலத்தால் கொல்ல முயன்றுள்ளனர்.சம்பவத்தை அறிந்த எஸ்,எம்,பாக்கர் மருத்துவமனை சென்று தாக்கப்பட்ட சமிவுல்லஹ்வுக்கு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். 

இது குறித்து புகார் அளித்த போது, தாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது! இதை கண்டித்து நேற்று வாணியம்பாடியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன போராட்டம் மற்றும் மறியல் நடை பெற்றது!      

       

0 comments:

Post a Comment