Friday, January 7, 2011

அண்ணனுக்கு தப்பாமல் கிடைத்த தக்லீதுகள்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...
குவைத்தில் ரவ்தா என்ற பகுதியில் தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத் சார்பாக பள்ளிவாசலில்  நடைபெற்ற நிகழ்ச்சியை, ''குவைத்தில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்' என்று உணர்வில் மெகா ஃபில்டப்' செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி நாம் ''என்னாது பள்ளிவாசலில் பொதுக்கூட்டமா?; நல்லத்தான் சுத்துராய்ங்க ரீலு! என்ற தலைப்பில் கடந்த
24 -12 -2010 அன்று ஒரு கட்டுரை வடித்தோம். பார்க்க கிளிக்  செய்க; http://mugavai-abbas.blogspot.com/2010/12/blog-post_786.ஹ்த்ம்ல்

நமது கட்டுரையில், மேற்படி நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடந்துள்ளது. அதற்கு அவர்கள்  பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள போட்டோவே சான்றாக உள்ளது. ஆனாலும் அது மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் என்று செய்தி போடுகிறார்கள் என்றால், பள்ளிவாசலில் நடந்ததை பொதுக்கூட்டம்  என்று உலகத்திலேயே சொன்னவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். என்ன  செய்ய..? என்னத்த சொன்னாலும் தலையாட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும்போது கடுகையும் பெரு மலையாக காட்டலாம். கட்டெறும்பையும்  கருஞ்சிறுத்தையாகவும் காட்டலாம்.
என்ற வாதத்தை பிரதானமாக வைத்திருந்தோம்.

நமது இந்த ஆக்கத்திற்கு  ரவ்தா கிளை என்ற பெயரில் பதில் சொல்ல வந்தவர்கள், தாங்கள்   முரீது பெற்ற[?]  அயோக்க்கியர் தி கிரேட்'அண்ணனின்  பாணியை            இன்ச் பை இன்ச் ஆக பின்பற்றி இருக்கிறார்கள். அதாவது,

''நானும் குவைத்தில் வீட்டில் தான் வேலை பார்க்கிறேன் என்று தனி நபர் எழுதுவது போல் எழுதிவிட்டு அண்ணன் பாணியில் தனது பெயரை போடாமல் மறைந்து  கொண்டு ரவ்தா கிளை நிர்வாகிகள் என்று சில போன் நம்பரை  போட்டுள்ளார். 

அடுத்து நாம் இந்த ஃபில்டப் செய்தி, தீவுத்திடல் பாணி என்று எழுதியதால், நாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை விமர்சித்ததாக அண்ணனைப் போல் அரைகுறையாக விளங்கிக்கொண்டு பொதுக்கூட்டம் என்பதற்கு பதில் சொல்லாமல் , அயோக்கியர் தி கிரேட்பாணியில் எண்ணிக்கை என்று இறுதிவரை புலம்பியுள்ளனர்.

அடுத்து கேட்ட கேள்விக்கு பதிலில்லை என்றால், கேள்விக்கு சம்மந்தமில்லாத  நபர்களையும், சம்மந்தமில்லாத விஷயங்களையும் நீட்டி முழங்கி மக்களின் கவனத்தை திசை திருப்பும் அயோக்கியர் தி கிரேட்பாணியை கடைபிடித்து, பாலியல்- புகையிலை- பணம் என்றெல்லாம் குதறியிருக்கிறார்கள். 

இப்ப விஷயத்திற்கு  வருவோம். நாம் வைத்த வாதம் என்ன என்பதை  நமது தலைப்பே சொல்லிவிடும். நாம் கேட்டது நீங்கள் நடத்தியது மாபெரும்  பொதுக்கூட்டமா? என்பதுதான். உங்களின் உணர்வு செய்தி உண்மைதான் என்பதில் நீங்கள் உண்மையாளர்களாகயிருந்தால், ''ஆம்! நாங்கள் நடத்தியது மாபெரும் பொதுக்கூட்டம் தான்; நாங்கள் இந்த பொது இடத்தில் பகிரங்கமாக நடத்தினோம். இதோ அதற்கான ஆதாரம் என்று சொல்லி நிரூபித்திருக்க வேண்டும். அல்லது பள்ளிவாசலில் நடத்தினாலும் அதற்கு பெயர் பொதுக்கூட்டம்தான்; இது எங்களின் புதிய தத்துவம் என்றாவது  சொல்லவேண்டும். அதைவிடுத்து 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு கிலோ இவ்வளவு'' என்ற அயோக்கியர் தி கிரேட் பாணியில் பாலியல் என்று தேய்ந்த ரிக்கார்டுகளை ஓட விடுவது ஏன்? இதிலிருந்தே தாங்கள்  உணர்வில் வெளியிட்டது 'பச்சைப் பொய்'யான செய்தி என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

அடுத்து இந்த நிகழ்ச்சி ''தீவுத்திடல் பாணி' என்று நாம் எழுதிய நோக்கம் அந்த கட்டுரையிலேயே உள்ளது. 
நமக்கு ஆச்சர்யம்! என்னப்பா இது! மண்ணின் மைந்தர்களே பொதுக்கூட்டம் போட்டு பேசமுடியாத நாட்டில் அண்ணன் ஜமாஅத் பொதுக்கூட்டமா? என்று. சரி! 'போட்டோவ பாப்பமே'ன்னு பார்த்தா அப்பத்தான் தெரியுது இது ''தீவுத்திடல் பார்முலா'ன்னு. 

என்ன புரியலையா? ஐம்பதாயிரம் பேர் கொள்ளளவு கொண்ட தீவுத்திடலில் பதினைந்து லட்சம் பேரை[?] அமரவைத்துக் காட்டிய கதை போன்று.

தீவுத்திடலை நாம மேற்கோள் காட்டிய  நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட ஆக்கம் வெளியான பின்பு எம்மை தொடர்பு கொண்ட தக்லீத் ஜமாஅத் மண்டல நிர்வாகியிடமும் விளக்கப்பட்டது. திரும்பவும் நாம் இவர்கள பள்ளிவாசலில் நடத்திய  'மாபெரும் பொதுக்கூட்டத்தில் [!?]  கூடிய மக்களின் எண்ணிக்கையை பற்றி பேசியதாக திசை திருப்புவது எந்தவகை நியாயம்? ஒரு வாதத்திற்கு தீவுத்திடல் பாணி என்றது எண்ணிக்கைக்காக என்றே வைத்துக்கொண்டாலும், கோபம் வருவது ஏன்? அப்ப தீவுத்திடலில் கூடிய மக்கள் விஷயத்தில் கூட்டி சொன்னீர்கள் என்பதால்தானே?

அடுத்து எங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைமையகத்தில் நடத்தும் நிகழ்ச்சியில்,கலந்து கொள்பவர்கள்  ஏழுபேர்-ஒன்பது பேர் என்றெல்லாம் ஏளனம் செய்திருக்கிறார்கள். ''சத்தியத்திற்கு எண்ணிக்கை அளவுகோல்  அல்ல''என்று அயோக்கியர் தி கிரேட் பல மேடைகளில் முழங்கியதை மறந்து, எண்ணிக்கையில் பெருமையடித்த காரணத்தால், ஒரு s.m .s ல் பத்தாயிரம் பேரை கூட்டுவேன் என்று ஆணவம் கொண்ட காரணத்தினால்தான் அல்லாஹ்வின் ஆலய மீட்பு போராட்டத்தைக் கூட நடத்த ஆறுமாத அவகாசம் எடுத்து மக்களை திரட்ட[?] வேண்டிய இழிநிலைக்கு இறைவன் ஆளாக்கிய பின்னும்  ஆணவமா?

அடுத்து இந்த தக்லீத் ஜமாஅத் மணடலம் சார்பாக வாரந்தோறும் 18 இடங்களில் மார்க்கச் சொற்ப்பொழிவு. என்று பந்தா காட்டியிருக்கிறார்களே! இந்த இடங்களில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்ற எண்ணிக்கை பட்டியல்மீனுக்கு வாளையும் பாம்புக்கு தலயும் காட்டுவது போல உள்ள ஒரு மண்டல தக்லீது மூலமாகவே நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த பட்டியலை வெளியிட்டால் ஆறு ஆண்டுகளாக அமைப்பு நடத்தும்  தக்லீத் ஜமாஅத்தை விட எங்களுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனாலும் உங்களைப்போல் எண்ணிக்கை பேசி எங்களை நாங்கள்  உங்கள் அளவுக்கு இழிவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. 

அடுத்து அயோக்கியர் தி கிரேட் அண்ணனின் அபகரிப்பு பற்றி நாம் தமிழ் பள்ளிகளில் கொடுத்த பிரசுரங்களுக்கு பதிலளிக்க திராணியின்றி, கோழைத்தனமாக பள்ளிவாசல் இமாமிடம் போய், ஒப்பாரி வைத்து எங்களை பிரசுரம் கொடுப்பதை தடுக்க முயற்ச்சித்த அயோக்கியரின் தம்பிகளான இந்த தக்லீதுகள் அதை  மறைத்து, '' குவைத்தில் உள்ள இலங்கைத் தமிழ் பள்ளியிலும், மற்றுமொரு தமிழ்ப் பள்ளியிலும் தனி மனிதரைத் தரம் தாழ்ந்து அவதூறு பரப்பி விநியோகிக்கப் படும் பிரசுரங்களை வெளியிட்டால் கட்டி வைத்து அடிப்போம் என ஜும்மா மேடையிலேயே கண்டித்தும் அதை மீறியதால் அனைத்து இயக்க சகோதரர்களும் ஒன்று கூடி விரட்டி அடித்ததாக புளுகி, அண்ணனுக்கு தப்பாத தம்பிகள் என்று நிரூபித்துள்ளனர்.

பொய்யரின் தம்பிகளே! எங்களை எந்த இயக்கத்தினர் அடித்து விரட்டினர் என்று நிரூபிக்கவேண்டும். மாறாக நாங்கள்   அடித்து விரட்டப் பட்டதாக    நீங்கள் புளுகும் மேற்படி இரண்டு பள்ளிகளிலும் தொடர்ந்து எங்களால் பிரசுரம் வழங்கப்பட்டு வருவது உங்களின் தக்லீது திரை மறைத்த கண்களுக்கு தெரியவில்லையா? எனது மரியாதைக்குரிய ஆசிரியர் மவ்லவி. ஜமாலுத்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிவாசலில் மார்க்க பிரசுரம்  மட்டும்                வெளியிட்டு வருகிறோம். அதே நேரத்தில்  சுமார் ஐயாயிரம் நோட்டீசுகள் அயோக்கியரின் குடும்ப மோசடி பற்றி மிர்காப் ஸிட்டி முழுக்க விநியோகிக்கிறோம் என்பதையும் சொல்லிக்கொள்கிறோம். 

அயோக்கியரை மட்டுமல்ல; அவர்களின் தக்லீது தம்பிகளையும் எதிர்கொள்ளும் துணிவு இறையருளால் பாக்கரின் போர்படைத் தளபதிகளுக்கு நிறையவே உண்டு. எனவே வெற்றுக் கூச்சலிடாமல் பள்ளிவாசலில் நடத்தினாலும்   பொதுக்கூட்டமே! என நிரூபித்து மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். [அது இருந்தால்]

பாக்கரின் போர்ப்படைத் தளபதி; 
முகவைஅப்பாஸ். 
குவைத் மண்டலத் தலைவர் 


0 comments:

Post a Comment