Sunday, January 9, 2011

மக்கா மசூதியைத் தாக்கியது நானே : ஆசிமானந்த்








ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத்தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம்அளித்துள்ளார்மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில்நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும்இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டதுஇது குறித்து தனக்குத் தெரியும் என்றும்ஆசிமானந்த் கூறியுள்ளார்.
மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளமுஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்துஆசிமானந்த் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடை ஆசிமானந்த் என்றறியப்படும்இந்துத்துவா சாமியார்குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியான மோடாஸாவில்நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் இந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்துசெயல்பட்டுள்ளார்.
இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்டஇத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும்மூளையாக இருந்து செயல்பட்டார் என்று கூறியுள்ள ஆசிமானந்த்கோரக்பூர் மக்களவைஉறுப்பினர் யோகி ஆதித்யநாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித உதவியும்செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவிபயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்திரேஷ்தான் என்று ஆசிமானந்த்கூறியுள்ளார்.
இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில்குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கரவாதக் குழுக்களை ஆசிமானந்த்அடையாளம் காட்டியுள்ளார்.
மாஜிஸ்ட்ரேட்டிம் அளித்த வாக்கு மூலத்தில்தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரணதண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன்என்றாலும் மக்கா மசூதி குண்டுவெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல்வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
சிறையில் சுவாமி ஆசிமானந்திடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் ஆசிமானந்த் தன்தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்துத்துவா பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலணாய்வுஅமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர் கொண்டதாக இந்து பயங்கவராதம்உள்ளதையும் ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
பிற இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலணாய்வு அமைப்புகள்விசாரணை செய்து வரும் நிலையில்ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றில்ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாதுஎன்றாலும் அவற்றின் விசாரணைக்கு இது உதவக்கூடும்.

2006
ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில்மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும்சிபிஐயும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தனஆசிமானந்தின் இந்த ஒப்புதல்வாக்கு மூலம் 

0 comments:

Post a Comment