Saturday, April 2, 2011

ஐஎன்டிஜே நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு




இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கடந்த 01-04-2011 அன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர்.













மேலும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும் வக்ஃபு நில மீட்பு குறித்தும், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்தும் ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர் விரிவாக எடுத்துக் கூறினர். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு
வந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். இந்நிகழ்வின்போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் ஜெயலலிதா அவர்களுக்கு திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் ஒன்றை அன்பளிப்பு செய்தார். இது சம்பந்தமான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு...

0 comments:

Post a Comment