Sunday, April 3, 2011

தி.மு.க வின் சிறுபான்மை பிரிவு த.த.ஜ.


தி.மு.க வின் சிறுபான்மை பிரிவு த.த.ஜ.


அன்பிற்குரிய இணையதள வாசகர்களுக்கு...

தி.மு.க வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத த.த.ஜ லீக் காரர்களை ஓரங்கட்டிவிட்டு கருணாநிதியின் கோவணமாக ஒட்டிக்கொள்ள பெருமுயற்சி எடுத்திருப்பதை இந்த வார உணர்வு(ஏப்ரல் -1-7-2011) பத்திரிகையை பார்பவர்கள் புரிந்துகொள்ளலாம்.அந்த அளவிற்கு கண்மூடிக்கொண்டு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுத்திருக்கிறார்கள்.தனது ரசிகர்களை தக்க வைத்து கொள்ள படாத பாடு பட்டு சொதப்போ சொதப்பு என்று சொதப்பி உள்ளானர்.செயற்குழு பற்றி நான்கு பக்கம் எழுதியும் ரசிகர்களை நம்ப வைக்க முடியாத கோபத்தை சமுதாய நலன் சார்ந்த முடிவெடுத்த இ.த.ஜ மீது காட்டியிருக்கிறார்கள்.

அவர்களது செயற்குழு செய்தியை படித்துப்பாருங்கள்....ஜெயலலிதாவிடம் கூட்டு சேர மாட்டோமா என்று ஏங்குவதை நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.
இவர்களை சந்திக்க அ.தி.மு.க. வினர் வந்தார்களாம்.அதே போல தி.மு.க வினரும் வந்தார்களாம்.ஆனாலும் அ.தி.மு.க.வினருக்கு டைம் கொடுத்து காத்திருந்தார்களாம் ...காத்திருந்த  நேரத்தில் இவர்களது மனநிலை இதுதான்..`அம்மா தாயே... அ.தி.மு.க.அறிக்கைல மட்டும் சொன்னால் போதும்.ஆட்சிக்கு வந்த பின் இட வொதுக்கீட்டைகண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் பரவா இல்லை....தாயே.. அறிக்கைல மட்டுமாவது சொல்லிடுமா இல்லேன்னா மக்கள் சட்டையை புடிப்பாங்கமா' என்பது தான்.
இதை அவர்களது செயற்குழு செய்தியே தெளிவுபடுத்துகிறது.(உணர்வு குரல் 15:31)  "விஜய காந்துடன் கூட்டணி ஏற்பட்டவுடன் இப்படித்தான் நடக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான்.இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் சொன்னாலும் சொல்லக்கூடும் என்று அடி மனதில் ஒரு எண்ணம்  இருந்தது "
அடாடா... எவ்வளவு எதிர் பார்ப்பு?
இந்த அளவுக்கு அ.தி.மு.க வை எதிர்பார்த்தது ஏன் தெரியுமா?கடந்த சட்ட மன்றத்தேர்தலின் போது அ.தி.மு.க விடத்தில் அண்ணன் பொய்.ஜே அ.தி.மு.க விடத்தில் பெருந் தொகை பெற்றார்(அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்து பெருந் தொகை பெறவில்லை என்று அண்ணன் மறுக்கட்டும்.சத்தியம் செய்ய அண்ணன் தாயாரா?).அந்த எதிபார்ப்பு தான்.கருணாநிதியிடம் 5 பைசா பெயராது என்பது நாடறிந்த உண்மை.ருசி கண்ட பூனையாக நாக்கை தொங்கப்போட்ட அண்ணனுக்கு வாழைபழத்தை வாயில் வைத்திருக்கிறது அ.தி.மு.க.
ஆனால் சமுதாய நலம் என்று பொய் ஜே பிதற்றுகிறார்.அ.தி.மு.க விடம் தொகை பெற்றது தான் சமுதாய நலமா?அரசியல் வாதிகளை விட கேடு கேட்டவர் தான் பொய்.ஜே.சமுதாய நலனை முன்வைத்து முடிவு எடுக்கும் இவர்கள் தான் தி.நகர் செயற்குழுவில் கீழ் கண்ட வாறு  முடிவு செய்தனர்....

"கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமெனில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக ஆக்கி அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்"   உணர்வு குரல் [15 -24 இல் ]
 
''முஸ்லிம்களின் வாக்கு திமுகவுக்கு விழவேண்டுமெனில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக அதிகரிப்போம் என்று சொன்ன கருணாநிதி, அதற்காக அவசர சட்ட திருத்தத்தை பிறப்பித்திருந்தால் ததஜ திமுகவுக்காக களப்பணியாற்றி முஸ்லிம்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுகபக்கம் கொண்டு வந்திருக்கும். அந்த வாய்ப்பையும் கருணாநிதி நழுவ விட்டு விட்டார்". என்று எழுதியிருந்தனர்

இப்படி முடிவெடுத்து விட்டு..இப்போது தி.மு.க வை ஆதரிக்கும் மர்மம் என்ன? அவசர சட்டத்தை பிறப்பித்து விட்டாரா கருணாநிதி?இதை கேட்கும் திராணி த.த.ஜ உறுப்பினர்களுக்கு உண்டா?இது சமுதாய நலமா? சமுதாய துரோகமா? அ.தி.மு.க விடத்தில் இவர்கள் தேர்தல் செலவுக்கு எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டபோது அவர்கள் பிடி கொடுக்க வில்லை.அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்.என்று தி.மு.க வின் கோவணமாக மாற சம்மதித்துள்ளனர் என்பது தானே உண்மை.இதற்கு தேர்தல் அறிக்கையில் தி.மு.க சொல்லி விட்டது என்று பூசி மொழுகுகிறார்கள்.தேர்தல் அறிக்கையில் சொன்னால் அது நிறைவேற்றப்படும் என்று இவர்களுக்கு யார் சொன்னது ?தேதல் அறிக்கை கூட இவர்கள் பாணியில் டிஷ்யு பேப்பர் தான்.ஆக டிஷ்யு பேபரை நம்பி ஒரு தேர்தல் நிலை பாடு.வெட்கப்பட வேண்டும் இவர்கள்.கறை வேட்டியை மாற்றிக்கொள்பவர்களை போல மாசத்துக்கு ஒரு நிலை எடுக்கும்  இவர்களை இனியும் சமுதாயம் நம்பத் தயாரில்லை என்பது தான் கான்கிரீட் உண்மை. தனி நபர் ஜமாஅத்தில் இருக்கும் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment