Friday, April 8, 2011

அண்ணனின் வார்த்தை விபச்சாரம் !

அண்ணனின் வார்த்தை விபச்சாரம்
பிரிவு பிரிவு ..... இதுவே அண்ணனின் எழுதப்படாத விதி .... எங்கெல்லாம் சமுதாய ஒற்றுமை மேலோங்கோகிறதோ அங்கெல்லாம் சுயம்பாக தோன்றி தனக்கே உரிய பாணியில் சூழ்ச்சி வேளையில் களமிறங்கி ஒற்றுமைகக்கு குந்தகம் விளைவிப்பது வழக்கம், கடந்த காலங்களில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தான் முன்னுரிமை என்று முழங்கிய அண்ணன் தற்போது நிதானமிழந்து, முஸ்லிம்களாவது மண்ணாங்கட்டியாவது தன்னுடைய விருப்பு வெறுப்பு தான் முக்கியம் என்ற ரீதியில் ம ம க வை தோற்கடிப்பது தான் தன்னுடைய தற்போதைய மார்க்க பணியாக எண்ணி நடந்து வருகிறார்.

பாவம் அவருக்கே தெரியாது தன்னுடைய வார்த்தை விபச்சாரம் தன்னை தரம் தாழ்த்தி கொண்டுரிக்கிறது என்று, சமீபத்திய உதாரணம் ஐஸ் ஹவுசில் சலவை தொழில் செய்யும் இரண்டு மாற்று மத சகோதரர்கள் பேசி கொண்டது, டி வி யில் நன்றாக பேசும் இவர், இவர் சார்ந்த் சமுதாயத்தை இப்படியா அசிங்கமாக பேசுவார் மாமா கட்சி என்று கொச்சை வார்த்தை, மற்றும் இல்லாததையும் பொல்லாததையும் பேசி ஒற்றுமையை சீர் கொலைக்கும் விதமாக சூழலை உருவாகுவதை கண்டு முகம் சுளித்தனர், பாவம் நாளுக்கு நாள் தன்னுடைய செயலால் சீரழிந்து வரும் இந்த நபரை பார்த்தால் யாருக்கு தான் அனுதாபம் வராது.

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்ன வென்றால் அவருக்கே தெரியாது அவருடைய இந்த முன் பின் முரணான முடிவுகளை கண்டு அவர் சார்ந்துள்ள இயக்கதவரே இந்த முறை அவரின் கூற்றை விரும்பவில்லை என்பதை நிதர்சனம் காண முடிகிறது, இந்த சூழ்நிலையில் நமக்கு கோவை சிறைவாசிகள் சொன்ன விஷயங்கள் தான் நியாபகத்திற்கு வருகிறது..... "அண்ணன் நீடூழி வாழ வேண்டும் இன்ஷா அல்லா மேலும் அவலங்களையும் அவமானங்களையும் கண்டு நடுத்தெருவில் நிற்கும் வரை இறைவா இவரை நீண்ட நாள் வாழ வை என்ற பிரார்த்தனை" ஆனால் நம்முடைய பிரார்த்தனையெல்லாம் இறைவா இவரைஇந்த உலகத்திலேயே திருந்தி இவரால் இழி பலி சுமத்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு பெற்று ஒரு நல்ல மனிந்தனாக மரணிக்க வை என்பதுதான், பொறுத்திருந்து பார்க்க வேண்டும் சூல்சிகாரனுக்கெல்லாம் சூல்சிகாரன் அல்லாஹ் என்ன செய்ய போகிறான் என்று.
அப்துல் கரீம்

0 comments:

Post a Comment