Tuesday, April 5, 2011

பிரசார விசயத்தில் பி.ஜே.வின் அந்தர் பல்டி.



ஆடிய கால் நிற்காது; அண்ணன் வாக்கு நிலைக்காது!

''ஆடிய கால் நிற்காது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் அரசியல் மேடைகளில் தான் ஆதரிக்கும் அணியின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி மைக்கைக் கடித்துக் குதறும் அண்ணன், இந்த தடவை மாநில நிர்வாகிகள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லமாட்டோம் என்றும், எங்களிடம் தேர்தல் பிரச்சாரத்திற்காக தேதி கேட்டு யாரும் வந்து நிற்க கூடாது என்றும், முழு வீச்சில் இறங்கி வேலை செய்யும் அளவுக்கு கருணாநிதியின் தேர்தல் அறிக்கை இல்லை.
எதோ பரவாயில்லை என்ற அளவில்தான் உள்ளது. எனவே பிரச்சாரத்திற்கு மாநில நிர்வாகிகள் வரமாட்டோம். உங்களை மதித்து உங்கள் தொகுதி வேட்பாளர் அணுகினால் நீங்கள் வெலை செய்யலாம் என்ற அளவிலான அனுமதிதான் இந்த திமுக அதரவுக்கு  அர்த்தம் என்று வாய்கிழிய பேசிய அந்த பொய்யர் பீஜே,  இப்போது திமுக கூட்டனிக்காக  மாநிலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று திருச்சியில் திருவாய்  மலர்ந்துள்ளார். படிக்க கிளிக் செய்க.

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை அவதாரம் எடுப்பாரோ..? அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ஆனாலும் மக்களின் மறதிதான் அவரின் மூலதனம் என்பதை மீண்டும் மீண்டும் காட்டுகிறார். இந்த பொய்யரை தக்லீது செய்யும் சகோதர்கள் இனியாவது திருந்துவார்களா? அல்லது ''நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்றுதான் எங்கள் அண்ணன் சொன்னார், மாநில நிர்வாகிகள் என்று சொன்னாரா? என்று சொல்லி  இதற்கும் வார்த்தை  ஜாலம் காட்டுவார்களா? அல்லது வசைமாரி பொழிவார்களா? பொறுத்துதான் பார்போமே.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment