Sunday, April 3, 2011

திருவல்லிக்கேணியில் ம.ம.க.வேட்பாளருக்கு ஆதரவாக இ.த.ஜ. வீதி வீதியாக , வீடு வீடாக சென்று பிரசாரம்!

திருவல்லிக்கேணியில் ம.ம.க.வேட்பாளருக்கு ஆதரவாக 
இ.த.ஜ. வீதி வீதியாக , வீடு வீடாக சென்று பிரசாரம்!




சேப்பாக்கம் -திருவல்ல்கேணி வேட்பாளர் சகோதரர் அன்சாரி அவர்களுக்காக இ.த.ஜ. மாநில செயலாளர் செங்கிஸ் கான் தலைமையில் இ.த.ஜ.வினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். ஒவ்வொரு தெரு முனைகளிலும் மெகா போன் மூலம் சிற்றுரைகள்  நிகழ்த்தப்  பட்டது .

தேர்தல் களத்திலும் தெளிவாக இருக்கும் இ.த.ஜ. வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் முகமாக ' அமைதியை நோக்கி ' எனும் தாஃவா  கையேடுகளையும் , மது சூதாட்டம், வட்டி , வரதட்சனை. லஞ்சம் ஊழல் போன்ற சமுக தீமைகளுக்கு எதிரான  கையேடுகளையும் , வழங்கி தேர்தல் பணியோடு அழைப்பு பணியும் செய்தது!      

0 comments:

Post a Comment