Friday, April 8, 2011

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை!

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை


கடந்த வார மக்கள் ரிப்போர்ட்டில் தலையங்கம் பகுதியில்,முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது என்கிற ரீதியில் செய்தி இடம் பெற்றிருந்தது.இதனை சில வாசகர்கள் சுட்டிக்காட்டினார்கள்.அதே போல தனி நபர் ஜமாத்தினரும் சுட்டிக்காட்டி இருந்தால் நாம் நமது கவனக்குறைவை விளங்கிக்கொண்டு தவறை உணர்ந்திருப்போம்.அதை பகிரங்கமாகவும் ஒப்புக்கொண்டிருப்போம்.நபர் ஜமாஅத்தினர் பொய்.ஜே விஷயத்தில் "பொய்.ஜே. சண்முக சுந்தரத்திற்கு வணக்கம் சொல்லவில்லை. வாழ்க என்று தான் சொன்னார்" என அறிவாலயத்தையே சோற்றுக்குள் மறைக்கும் பொய்யை சொல்வதுபோல் நாமும் சொல்லி சமாளிக்க மாட்டோம்.
ஆனால் மக்கள் ரிபோர்ட் மீது காழ்புணர்ச்சி கொண்டு,எதோ பார தூரமான தவறை செய்து விட்டதைப்போல பாய்ந்து பிறாண்டி இருக்கிறார்கள்.அதனால் களவாடப்பட்ட பத்திரிகையான உணர்வு பத்திரிகையின் லட்சணத்தை எடுத்துக் காட்ட வேண்டி உள்ளது...

மார்ச் -25-31-௨௦௧௧ தேதி இட்ட இதழில் பக்கம் 7 இல் , 'முஸ்லிம் கட்சிகளா?முஸ்லிம் எதிர்ப்புக் கட்சிகளா?' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையில்..."சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் துறைமுகம் தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் சேப்பாக்கம் தொகுதி ஆகியவை மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன "என குறிப்பிட்டு தாங்கள் அரசியல் சூனியங்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
சேப்பாக்கம் &திருவல்லிக்கேணி என்பது ஒரு தொகுதிதான் எனறோ,தொகுதி மறு சீரமைப்பின் மூலம் அது மாற்றியமைக்கப்படிருக்கிறது என்றோ அறியாத இவர்கள் அரசியல் கட்டுரைகள் எழுதும் அவலம் உணர்வு பத்திரிகையில் மட்டும் தான் நடக்கும்.
அதே போல ,ஏப்ரல் 1-7-2011 தேதியிட்ட அதே இதழில்,11 ஆம் பக்கத்தில் ""சரத் குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள்"என எழுதி இருக்கிறார்கள்.அரசியல் கட்சிகளின் பெயரை கூட ஒழுங்காக தெரிந்து வைத்துக்கொள்ளாமல் ஏடா கூடமாக எழுதும் இவர்கள் மக்கள் ரிபோர்ட்டை பற்றி குறை கூற வெட்கப்படவேண்டும்.
இன்னும் சொல்ல வேண்டுமானால்....மக்கள் ரிப்போர்ட்டில் இந்த வாரம் வரும் செய்திகள்,அடுத்த வார களவாண்ட பத்திரிகையில் வருவதை கண்கூடாகக் காணலாம்.இந்த லட்சணத்தில் மக்கள் ரிபோர்டைக் குறை கூறும் யோக்கியதை இவர்களுக்கு உண்டா?
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!.

0 comments:

Post a Comment