Tuesday, April 12, 2011

இத.ஜ. இறுதிக்கட்ட பிரசாரம் திருவல்லிக்கேணியில் திரண்ட மக்கள் வெள்ளம்.



இத.ஜ. இறுதிக்கட்ட பிரசாரம்

திருவல்லிக்கேணியில் திரண்ட மக்கள் வெள்ளம்.


முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து 16 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்ட இ.த.ஜ. மாநில நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இறுதியாக சென்னை திருவல்லிக்கேணி சேக் தாவூத் தெருவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி எதிரிகளுக்கு அச்சத்தையும் இயக்கத் தோழர்களுக்கு உற்சாகத்தையும் அளித்தது!

இரு தினங்களுக்கு முன் திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்தும், மமக வை எதிர்த்தும் வைத்த வாதங்கள் அத்தனைக்கும் மாநில செயலளார் செங்கிஸ் கான் வரிக்கு வரி பதிலடி கொடுத்து பி.ஜே.வின் பித்தலாட்ட அரசியலை பிட்டு பிட்டு வைத்தார். முதல் நாள் புது பேட்டை பிரசாரக் கூட்டத்தில் பேசிய செங்கிஸ் கான் பேச்சுக்கே அவர் மேல் காவல் துறையில் ததஜவினர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

அடுத்து பேசிய மணியள போது செயலாளர் சித்திக் அதிமுக ஆதரவு ஏன்? எனும் நிலைப் பாட்டையும் பின்னர் பேசிய இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர் திமுக ,காங்கிரஸ், பாமக கட்சிகளின் துரோகங்களை பட்டியல்ட்டு பேசியது மக்களை கவர்ந்தது!

இறுதியாக பேசிய வேட்பாளர் அன்சாரி இங்கே இணைய வேண்டியவர்கள் இணைந்திருக்கிறோம்! இனி எவருக்கும் நாம் அஞ்ச வேண்டியதில்லை ! என கூறினார்.

திருவல்லிக்கேணி இதஜா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக்கூட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர். முன் தினம் நடந்த பி.ஜே.வின் பேச்சை கேட்க வந்த மக்களைவிட இதஜா கூட்டத்திற்கு திரண்ட மக்கள் வெள்ளத்தை பார்த்து திமுக மட்டுமின்றி உளவுத் துறைக்கும் ததஜ விற்கும் அதிர்ச்சி ஏற்பட்டுளதாக தகவல்.! அல்ஹம்து லில்லாஹ்!
இன்ஷா அல்லாஹ் படங்கள் விரைவில் ...
வின் டிவி யில் 13.4.11 முதல் ஒளிபரப்பாகும்.

0 comments:

Post a Comment