Tuesday, April 12, 2011

கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாராம்- சொல்கிறார் பீஜே!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''கொடுத்த வாக்குறுதியை கருணாநிதி காப்பாற்றுவார் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுலாபுதீன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக கூறியுள்ளார். அவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். [தினத்தந்தி மதுரை பதிப்பு 11 --04 -2011]

கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று தரையில் விழுந்து புரண்டு புலம்புகிறார் பீஜே. அதோடு இடஒதுகீட்டை அதிகரித்து தருவதாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் அடித்துக் கூறுகிறார். அவ்வாறு கருணாநிதி அதிகரித்து தருவதாக கூறிய வார்த்தையை திமுக தேர்தல் அறிக்கையில் இருந்து காட்டத் தயரா என்று ஏற்கனவே கேட்டோம். அவரோ, அவரது பினாமிகளோ மூச்சு விட வில்லை. இப்போது மீண்டும் மீண்டும் அதே கோயபல்ஸ் பொய்யை அடித்து விடுகிறார். ஆகட்டும் அது அவருக்கு கை வந்த கலைதானே!

இட ஒதுக்கீட்டை கருணாநிதி அதிகரிக்கிற மேட்டர பிறகு வச்சுக்கிருவோம். முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி உறுதியளித்தாரே!
அதையாவது இன்று வரை நிறைவேற்றியதாக, குளறுபடிகள் சரி செய்யப்பட்டு விட்டதாக இந்த பொய்யர் பீஜே சொல்லத் தயாரா?


தனது ஆட்சியில் 4 .5 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கியதை தனது ஆட்சியின் சாதனையாக கருணாநிதி கூறியுள்ளாரே!
அந்த வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்குரிய 3 .5 இட ஒதுக்கீட்டின் படி, 15 ,750 முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு பெற்றனர் என்று இந்த பொய்யர் பீஜே காட்டத் தயாரா?

கருணாநிதி இடஒதுக்கீட்டின் குளறுபடிகளை சரி செய்யவில்லை என்று இந்த பொய்யர் ஜமாஅத் கடந்த 17.10.2010 செங்கல்பட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளதை பாரீர்;

''முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வ தாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பெயரளவில் இட ஒதுக்கீட்டு வழங்கி விட்டு, அதன் பலன் முஸ்லிம்களுக்கு கிட்டாமல் பார்த்துக் கொண்டதோடு, தனது ஆட்சிக்காலம் முழுமைக்கும் இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாத கருணாநிதி, மீண்டும் இட ஒதுக்கீட்டை உயர்த்துவராம். அறிவாலயத்தில் அறிவை அடகு வைத்த இந்த பொய்யர் பீஜே கூறுகிறார். இவர் வேண்டுமானால் மு.க. வுக்கு விசுவாசமாக முனங்கட்டும். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் மு.க. விடம் மூளையை அடகு வைக்க சொல்வது முட்டாள்தனமில்லையா?

அடுத்து இந்த பொய்யர் பீஜே எவ்வாறெல்லாம் மக்களின் மறதியை பயன்படுத்தி காரியம் சாதிக்கிறார்; காய் நகர்த்துகிறார் என்பதை பாருங்கள். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க அவர்கள் கூறிய காரணம் பாரீர்;

''ஆனாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏராளமான வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் டிஎன்டிஜே பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த முதல்வர் முஸ்லிம் மக்களின் கடும் அதிர்ப்தியைக் கண்ட பின் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலும் உயர் கல்வியிலும் மூனறை சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையையும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை. எனவே இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது. அதே சமயம் இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம். [5-4-2009 கோவையில் TNTJ மாநிலப் பொதுக்குழு].

இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது என்று அன்று தீர்மானம் போட்ட இந்த பொய்யர் ஜமாஅத், இட ஒதுக்கீட்டு விஷயத்தில் இப்போதும் திமுகவின் அதே துரோகம் தொடர்கையில், மீண்டும் அதே திமுகவை ஆதரிக்க இந்த பொய்யர் பெற்றது என்ன? மூளைக்கு மூளை விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு திமுக முஸ்லிம்களுக்கு செய்தது என்ன? இட ஒதுக்கீட்டு குளறுபடி சரி செய்யப்பட்டதாலா? கருணாநிதி வெள்ளையறிக்கை வெளியிட்டதாலா? பொய்யர் பீஜே சொல்வாரா?

தேர்தல் அறிக்கையில் பரிசீலிப்போம் என்று சொல்லிவிட்டார் என்ற ஒற்றை வரியை கிளிப்பிள்ளையாக மீண்டும் பொய்யர் பீஜே சொல்வாரானால், 2004 தேர்தல் அறிக்கையில்
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக சொன்ன காங்கிரஸ் இன்றுவரை இடஒதுக்கீடு தராதது ஏன்? என்பதை பொய்யர் பீஜே விளக்குவாரா? அந்த காங்கிரசை இப்போதும் ஆதரிப்பது ஏன் என பொய்யர் விளக்குவாரா? அந்த காங்கிரஸ் ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து வரும் திமுக, மத்திய அளவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு குறித்து இதுவரை ஆற்றிய பணிகளை பொய்யர் பீஜே பட்டியலிடுவரா?

எனவே அன்பான முஸ்லிம்களே! இந்த பொய்யரின் பித்தலாட்ட சூனியப் பேச்சுக்களை நம்பாதீர்கள். உங்கள் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளித்து, வெற்றிபெற செய்யுங்கள். சட்டமியற்றும்
அவைகளில் சன்மார்க்க வாதிகள் அணிவகுக்கட்டும்.
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு விஷயத்திலும், கட்டாய திருமண பதிவுச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சனாதன கொள்கையை கடைபிடிக்கும் கருணாநிதிக்கு பாடம் புகட்ட, முஸ்லிம்கள் போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வக்களியுங்கள். சமுதாய நலன் என்ற பெயரில் சமுதாய துரோகம் செய்யும் இந்த பொய்யரின் முகத்தில் கரி பூசுங்கள்.

இறைவா! முஸ்லிம் சமுதாயத்திற்கு பாதுகாப்பான ஆட்சியை நல்கிடுவாயாக!
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment