Thursday, July 8, 2010

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!
-->
கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.
மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது. பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!
-செங்கிஸ்கான்.

0 comments:

Post a Comment