Wednesday, July 14, 2010

மக்கள் மன்றம் (எடுபடாத எரிச்சல்கள்....)

அல்லாஹ்வின் திருப்பெயரால்!!!!
சமீபத்தில் இராஜபாளையத்தில் குவைத் ராஜா என்பவரும், திருச்சியில் பாரிவேந்தன் என்பவரும் தன் பெயரை நிலை நிறுத்த விளம்பரத்திற்கு மேல் விளம்பரம் செய்து மக்களை கூட்டியதை சில மாதங்களுக்கு முன்பு பேப்பரில் கண்டேன். அவ்வாறான ஒரு காரியத்தை தன் ஆதிக்கதி்ல் செயல்படும் ஒரு இயக்கத்தின் பெயரால் நடத்த நினைத்து தான் சொன்னபடி கூட்டம் வராமல் போனதன் ஆத்திரத்தை டெல்லி விமானத்தை பிடிக்கும் அவசரத்தில் சேம்சைடு கோல்போட பல உண்மைகள் ஊரறிய நாறிப்போச்சு.
நான் 15 லட்சம்னு சொன்னா 15 ஆயிரம் பேருக்கு சமம் என பஞ்ச் டயலாக் அடிக்கும் கணக்குப் புலியின் கணக்குப்படி நாடு முழுவதும் சுமார் 300 பேர் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பிரச்சாரம் சென்றடைந்து மாநாடு டமால் ஆனதால் கணக்குப் புரியாமல் தவிப்பதையே அவரது எரிச்சல் எழுத்துக்கள் காட்டுகின்றன. இதஜவினரை எண்ணிப் பார்த்தவர் தங்களுடைய தீவுத்திடல் பொதுக்கூட்டதிற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களையும், ஹாருன், பஷீர் ஆதரவாளர்கள்; மற்றும் இன்ன பிறரையும் கழித்துவிட்டால் ததஜவில் இப்போது எத்தனை பேர் உள்ளார்கள் என்ற கணக்கும் தெரிந்திருக்குமே. வெளிநாட்டு ததஜகாரர்களை எல்லாம் வரவழைத்து மேடையை நிரப்பி காட்டினாலும் திடலின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களையும் நேரடி ஒளிபரப்பில் காட்டி மகிழ்ந்த போது தெரிந்து கொண்டோம் இதஜ வாதங்களை மக்கள் உள்வாங்கி உணர்ந்ததை. டம்மி பீஸை ஒரங்கட்டிவிட்டு காமெடி பீஸ கொலுவில வச்சிக்கிட்டு மாங்காய்களுக்கு ரியல் தலைவனாகவும் ஹாருனுக்கு தொண்டனாகவும் split personality கேரக்டரில் கலக்கியது சூப்பர்.
அதிகாரிகளிடம் 15 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று உண்மையை ஒப்புக்கொண்டவர். சமுதாய மக்களிடம் 15 லட்சம் என்று பொய் சொன்னது. ரோட்டில் போனவன் வந்தவன், கடற்கரையில் போட்டுக்கு அருகில் ஒதுங்கியவன், இன்னும் அன்றைய தினம் மதராசபட்டணத்தில் இருந்தவன் அனைவரையும் தீவுத்திடல் கணக்கில் சேர்த்தது என்னவோ மதீனாவில் யூதர்கள் நபியை எதிர்பார்த்து இருந்தது போல் தீவுத்திடல் கூட்டத்திற்காகவே பிறப்பெடுத்த மாதிரி.. திஸ் ஈஸ் டூ மச்.
இதஜாவினர் வராவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் கூட்டம் அலைமோதும் என்றீரே இப்போது பாக்கரும் வரவில்லை அவருடைய ஆட்களும் வரவில்லை என்ற நிலையில் எப்போதும் ஆர்ப்பரிக்கும் பெண்கள் பகுதி வறண்டு காணப்பட்டதே ஏன்? பெண்கள் யாரை நம்பவில்லை என்று இப்போது புரிந்திருக்குமே!
இல்லாத அதிகாரி சொல்லாத 6 லட்சத்தை சொன்னதாக பழியை காவல்துறை மீது போட்டு மக்களுக்கு படங்காட்ட நினைத்தது. கும்பகோணம், வல்லம் பத்து லட்சம் எல்லாம் நானும் பாக்கரும் சும்மா அடிச்சிவிட்டது என்ற ஒப்புதல் ஓகே, அப்ப வல்லத்தில் அழுது காட்டினீர்களே அதுவும் அப்படித்தானா?
மக்கள் இலவச வாகனமும் சாப்பாடும் கொடுத்துத் தான் இதுவரை நடத்தப்பட்ட மாநில மாநாடு, பேரணிகளுக்கு அழைத்து வரப்பட்டார்கள் இதில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள் நாங்களும் அப்படித்தான் செய்தோம் என்ற உண்மையையும் சேர்த்து சொல்ல மறந்தது ஏன்?
இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம் எதுவோ அதனடிப்படையிலேயே ஹாருன் எம்பியை பிடித்து பிரதமரையும், சோனியாவையும் பார்த்து விட்டு ஏதோ பிரதமர் இவர் கும்பலை ஸாரி கூட்டத்தை பார்த்து அழைத்ததாக செய்தி பரப்பி விட்டு அதிகாரபூர்வ அறிக்கையில் நாங்களாக தான் அப்பாயின்மெண்ட் வாங்கி போனோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டது ஏன்?
ஆளுங்கட்சியின் தூதர் ஹாருன் எம்பி தன் கடமையை செய்து விட்டார் இனி வருகின்ற தேர்தலில் தங்களுக்கு கிடைத்த 10, 15 நிமிட அப்பாயிண்மெண்டின் பலனிற்காக காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டுப்போட ஏமாளி சமுதாயம் இப்போதே ரெடி.
அடுத்து எங்கவூரு மேட்டர்...
பாக்கர் நல்லவரா கெட்டவரா நாளை மறுமையில் தெரியப்போகின்றது ஆனால் பஸ்ஸில் அன்னிய பெண்ணோடு போனாலும் பாக்கர் நல்லவருதான்னு தீர்ப்ப மாத்தி சொன்னது எந்த நாட்டாம? இப்ப ததஜ பசங்கள ஏவி அதே விஷயத்திற்காக பொதுக்கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க தூண்டியது ஏன்? சஹாபுதீன், அப்துல் ரஹ்மான் என்ற 2 ததஜ முரீதுகள் பொதுமக்களா? உங்கள் பாணியில் இதே பதிலடியை நாளை இதே அதிரையில் இதஜகாரர்கள் நடத்திக் காட்ட மாட்டார்களா என்ன? இன்னொரு எஸ்பி பட்டிணம் நிகழ்ச்சியை அதிரை பொதுமக்கள் நடத்த ரொம்ப நேரமாகாது அப்பு. இதஜ மீட்டிங் எபக்ட் தான் அதிரையிலிருந்து ஒரே ஒரு பஸ் தீவுத்திடலுக்கு வந்தது. அடுத்த முறை அப்படி ஏதாவது நடந்த இந்த ஒரு பஸ்ஸூம் வராது ஆமா.
கேள்வி மேல் கேள்வி கேட்ட செங்கிஸ்கானை விட்டு விட்டு உம்மை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாத பாக்கர் பின்னாடி பதில் சொல்ல முடியாமல் போய் ஒளிவதேன்? மூஞ்சிக்கு நேரா கேள்வி கேட்கனுமாம் அதிரையில் அடிச்சதே தீவுத்திடல்ல நெரி கட்டுதுன்னா மேட போட்டு மண்ணடியில கேட்டது, மதுரையில கேட்டது, டிவியில ஒளிபரப்பியது என்ன முதுகிற்கு பின்னாலயா? ஒரு மேடைய போட்டு பதில சொல்ற வழிய பாருங்க பாய் சும்மா மூஞ்சி மொகரன்னு காலத்த கடத்தாதீங்க. பாக்கர் கேட்காமல் விட்ட கேள்விய நான் கேட்கிறேன்...? ஸாரி, கேள்வி கேட்டாத்தான் இப்போ உங்களுக்கு புடிக்காதுல, மறந்துட்டேன்.
நேத்து வரை நாங்களும் ததஜவுல உங்களிடம் அரசியல் பாடம் படித்தவர்கள் தான் உங்களுடைய அடித்த மூவ் எப்படி இருக்கும்னு அனுமானிக்கிற நாங்க, அத எப்படி சமாளிக்கிறதுன்ன கூடவா தெரியாம இருப்போம். மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பலத்தை நம்புற நீங்களே இப்படின்ன அல்லாஹ்வின் பலத்த நம்புற நாங்க எப்படி திருப்பி கொடுப்போம்னு கொஞ்சம் குர்ஆன் ஹதீஸை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆத்திரத்துல நீங்க ஆட ஆட தான் உங்களோட சுயரூபமும் சேர்ந்து தெரியும், தெரியணும். இன்னும் இப்படியே உங்கள் எரிச்சல் விளையாட்ட தொடர்ந்தீங்கன்ன மெஸ்மரிஸம் செய்யப்பட்டுள்ள ததஜ முரீதுகள் கூட பீஜே ன்னு சொல்லமாட்டான், ப்பீ ச்சே ன்னு அசிங்கமா நினைத்து ஒதுங்கி போற நெலம வந்துரும் சொல்லிப்புட்டேன்.
அதிரையில் நடந்த இதஜ பொதுக்கூட்ட அதிர்வின் அலைகளை இன்று வரை உலகளலாவில் பரவச்செய்து கொண்டிருக்கும் தலைக்கும் தலைகால் புரியாத வால்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
அதிரை பொதுமக்கள் சார்பாகஅப்துல் வஹாப்.

0 comments:

Post a Comment