Saturday, June 11, 2011

பொய்யர்கள் வெளியிட்ட போர்ஜரி கடிதத்திற்கு விளக்கம்!


பொய்யர்கள் வெளியிட்ட போர்ஜரி கடிதத்திற்கு விளக்கம்!




அன்பிற்கினிய இணைய தள வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் உம்ரா சென்று இருந்ததால் செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிட முடியாமல் போனது , மேலும் உம்ரா சென்று விட்டு கடந்த 16.5.11 அன்று திரும்பி விட்டாலும் கூட செய்திகள் வெளியிட முடியாததற்கு காரணம் எனது மாமனார் கீழே விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக இருந்ததால், அவரை பார்ப்பதற்காக சொந்த வூர் சென்று குடும்பத்தோடு தங்க நேரிட்டதாலும் , நமது தளத்தில் செய்திகள் வெளியிட முடிய வில்லை.

இதை பயன் படுத்தி அவதூறு ஜமாத்தினர் தங்களின் போய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எஸ்.எம் பாக்கருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்றும் , அவர் என்னை இயக்கத்தை விட்டு வெளியேற்ற சதி செய்வதாகவும் , நான் கருத்து வேறுபாட்டால் எஸ்.எம்.பாக்கருக்கு கடிதம் எழுதியது போல் பொய்யாக ஒரு கடிதத்தை எழுதியதோடு போர்ஜரியாக எனது கை எழுத்தையும் போட்டுள்ளனர்.

போலி கை எழுத்து போடுவதை பிழைப்பாக கொண்டவர்கள் என் கை எழுத்தையாவது, த.த.ஜ.வில் உள்ள பழைய ஆவணங்களில் பார்த்து ஒழுங்காக போட்டிருக்கலாம்! என்ன செய்வது இ.த.ஜ.வை விட்டு நான் வெளியேற வேண்டும் என்கிற இவர்களின் பேராசை இந்த இழி செயலை செய்ய வைத்துள்ளது! அந்த அளவுக்கு நமது எழுத்தும் , பேச்சும் இவர்களின் முகத்திரையை கிழித்து பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது . என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!

கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ? நான் உம்ராவில் இருந்து வந்ததும் உண்மை வெளியாகி எனக்கும் பாக்கருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்தால், நம்முடைய ஆதரவாளர்களே நம்மை கேவலமாக பார்ப்பார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் இவர்களால் எப்படி இது போன்ற பொய்களை எழுதவும் பரப்பவும் முடிகிறது? அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத அரசியல்வாதிகள் கூட இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதில்லை ! கருணாநிதி கூட 1990-இல் ஜெயலலிதா எழுதிய ஆனால் வெளியிடாத கடிதத்தை வெளியிட்டு கேவலப் பட்டார், ஆனால் அண்ணனோ நான் எழுதாத கடிதத்தை எழுதியதாக வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.

இந்த அவதூறு விஷயம் நான் உம்ராவில் இருந்த போது எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது ! நான் மிகுந்த மன வேதனை கொண்டு காஃபாவில் நின்று கை ஏந்தினேன், எப்படி நபி ஸல் அவர்கள் ஒட்டக குடலை சுமந்து கொண்டு கைஎந்தினார்களோ அதே போன்று அதே காஃபாவில் நின்று "யா அல்லாஹ் ! இந்த அவதூறு பரப்பியோரை
நீ பார்த்துக் கொள்" என்று அவனிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்!
தாமதமானாலும் அல்லாஹ்வின் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

மேலும் இணையத் தளத்தில் மட்டுமின்றி இந்த போர்ஜரி கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து பரப்பிக் கொண்டுள்ளனர், மேலும் இது குறித்து த,த,ஜ வினர் உள்பட பல சகோதரர்கள் நம்மிடம் விளக்கம் கேட்டனர்,கேட்கும் அனைவருக்கும் நான் சொல்வதெல்லாம் ' இந்த கடிதத்தை எழுதியவன் , திருத்தியவன் , வெளியிட்டவன் , பரப்பியவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ! என பிரார்த்தியுங்கள் அது போதும் ' எனக் கூறியதை அடுத்து 'அவர்களின் ஆதரவாளர்கள் கூட இந்த விசயத்தில் வருந்துகின்றனர், மேலும் எனக்கும் சகோதரர் எஸ்,எம்,பாக்கர் அவர்களுக்கும் எந்த பிணக்கோ கோபமோ இல்லை என்றும் , தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன் என்பதையும் இன்ஷா அல்லாஹ் இவர்களை தோலுரிக்கின்ற வேலை தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண் : செங்கிஸ் கான்,
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


0 comments:

Post a Comment