Tuesday, June 21, 2011

மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம், தர்பியா மற்றும் கல்வி உதவி நிகழ்ச்சி!











மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம், தர்பியா மற்றும் கல்வி உதவி நிகழ்ச்சி!





மதுரை மாவட்டத்திற்கு அண்மையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த 19.6.11 ஞாயிறு அன்று காலை மதுரை மாவட்ட தர்பியா நடை பெற்றது ! காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை முபாரக் பள்ளியில் நடை பெற்ற இந்த நல்லொழுக்க பயிற்சியை மாநில செயலர் செங்கிஸ்கான் நடத்தினார். இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட எரளமனோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

மாலை 7 மணியளவில் வில்லாபுரத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது !
இதில் மாவட்ட பேச்சாளர் சம்சுதீன் 'கல்வியின் அவசியம்' எனும் தலைப்பிலும்
சகோதரர் நசிர் அஹமத் ஜமாலி 'நபிகளார் உருவாக்கிய சமுதாயம் ' எனும் தலைப்பிலும்
மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'சமூகத் தீமை மது' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இன்னிகழ்ச்சியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப் பட்டது! மாவட்ட கிளை நிர்வாகிகள் , பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்னிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


0 comments:

Post a Comment