சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி
மதுரையில் மாபெரும் கோரிக்கை பொதுக் கூட்டம்!
மதுரையில் மாபெரும் கோரிக்கை பொதுக் கூட்டம்!
தமிழகத்தில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் சிறை வாசிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று 2.10.11 அன்று மாலை மதுரை தெற்கு வாசலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மதுரை மாவட்டதலைவர் ராஜ் முஹம்மத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மண்டல பொறுப்பாளர் ரபிக் ஜமான் தலைமை வகித்தார் .மாவட்ட தாயி சம்சுதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.
மாநிலப் பொது செயலாளர் சித்திக் மற்றும் பொருளாளர் தொண்டியப்பா, ஆகியோர் உரை நிகழ்த்தினர்..
இறுதியாக பேசிய எஸ்.எம்.பாக்கர் சிறைவாசிகளை விரைவில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் இதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மூவரின் தூக்குதனடனையை ரத்து செய்வதை எப்படி மக்கள் போரட்டாமாக தமிழ் ஆத்ரவலர்களால் முன்னெடுத்து செல்லப் படுகிறதோ அதைப் போன்று
மாபெரும் மக்கள் போராட்டமாக INTJ கையில் எடுத்து செல்லும் என முழங்கினார்.
கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சிறைவசிகளுக்காக கொள்கை சகோதர்கள் கூடி அல்லாஹு அக்பர் என குரல் முழக்கம் செய்ததை மதுரையின் மாற்று மத மக்களும் காவல் துறையினரும் வியப்போடு பார்த்தனர். alhamdhu lillah.
0 comments:
Post a Comment