Friday, October 21, 2011

'சிறை'யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.


ரு இமாலய தவறை தாங்களே செய்துகொண்டு அதற்கு எதிராக போராடுவது போல் மக்கள் முன்பாக நாடகம் ஆடுவதில் கைதேர்ந்தவர்கள்  சங்பரிவாரங்கள். சவபெட்டி ஊழல் வரை சளைக்காமல் செய்த கட்சி பாரதீயஜனதா என்பது சாமான்யனுக்கும் தெரியும். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியோ, ஊழல் எதிர்ப்பு மற்றும் கருப்புப் பண மீட்பு என்று ரதயாத்திரை தொடங்கி நாட்டை வலம்வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா ஊழல் வழக்கில் 'உள்ளே' போய் விட்டார் என்பதுதான் பரபரப்பு செய்தியாகும்.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இதுபோக,   இவரது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக ( அரசுக்கு 40 கோடி இழப்பு ) லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . சிராஜின் பாட்சா, பால்ராஜ் என்பவர் இந்த புகாரை தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என எடியூரப்பா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. மற்றும் மாஜி அமைச்சர் கிருஷ்ணய்யா ரெட்டி ஜாமினும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வாரன்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை வரும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
 
பாஜக ஆளும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன என்று பாஜக தலைவர்கள் அவ்வப்போது முழங்குவர். ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து சிறையையும் சந்தித்துள்ள எடியூரப்பா போன்றவர்கள் தான் முன்மாதிரி என்றால் இதை விட இந்தநாட்டிற்கு வேறு கேவலம் உண்டா? இந்த லட்சணத்துல ஊழல் ஒழிப்பு ரதயாத்திரை வேறு அத்வானி நடத்துகிறார். முடியுமானால் எடியூரப்பாவின் படத்தையும் அத்வானி ரதத்தில் வைத்துக் கொள்ளட்டும். மக்கள் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

0 comments:

Post a Comment