Tuesday, October 18, 2011

குன்றத்தூரில் குழப்ப வாதிகளுக்கு பதிலடி!



குன்றத்தூரில் குழப்ப வாதிகளுக்கு பதிலடி!  

அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  காஞ்சி மாவட்ட குன்றதூர் கிளை சார்பாக குன்றத்தூர் ஹனீஃப் இல்லத்தில்    16.10.2011 ஞாயிற்றுகிழமை அன்று  காலை 10 மணி முதல் 2 .மணி வரை, கேள்வி-பதில் நிகழ்ச்சி  தாஃவா குழு தலைவர் இணையதுல்லாஹ் தலைமையில்   நடைபெற்றது.
பாக்கர் ஜமாத்தில் இருப்பது பாவம்! எங்கள் ஜமாத்தில் இருந்தால் தான் சொர்க்கம் செல்லலாம் என பெண்கள் மத்தியில் ஃ பித்னா பரப்பிக் கொண்டிருந்த பொய்யர்களுக்கு மாநிலப் பேச்சாளர் மைதீன் ' நான்கு மத்ஹப்களை பின்பறினால் தான் சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறிய போது நபி ஸல் அவர்களும் சஹாபாக்களும் எந்த மத்ஹப் என   கேள்வி கேட்ட நாம் இன்றைக்கு த.த.ஜ.வினர் மட்டும் தான் சொர்க்கம் செல்லும் ஜமாஅத் என்றால் நபி ஸல் மற்றும் சஹாபாக்கள் த.த.ஜ.வினர் இல்லையே ? எனக் கேட்டு பொய்யர்களின் முகத்திரையை வீடியோ போட்டு வெளிச்சம் காட்டினார்.    

இதில் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா உரையாற்றினார்.    பின்னர்  நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில  செயலாளர்கள்  முஹம்மது முஹ்யித்தீன், காஞ்சி ஜாஹிர் ஹுசைன், அப்துல் ஹமிது ஆகியோர் ஆதாரபூர்வமக பதில் அளித்தார்கள்.

இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சியை குன்றதூர் கிளை இதஜ ஏற்பாடு செய்திருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!
-மணலி அபூ ஆபிதீன்.

0 comments:

Post a Comment