Wednesday, October 19, 2011

'எங்கண்ணன் குதிருக்குள் இல்ல ' பிரபல பொய்யரை அடையாளப்படுத்திய கடிதம்!



அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால்...
 'எங்கண்ணன்   குதிருக்குள்  இல்ல '
 பிரபல பொய்யரை அடையாளப்படுத்திய கடிதம்!

                                              பழைய  நெல்லு  குதிர்  
 
தக்லிது வாதிகளை நோக்கி நாம் வைக்கும் கேள்விகளுக்கு பொய்யன் என்ற
வலைதளத்தின் மூலமாக ஆபாசமாக பதில் அளித்து வந்ததை நாமெல்லாம் நன்கு
அறிவோம். அவர்களின் இந்த பதிலில் அவர்களின் கூட்டத்திற்கே உடன்பாடு
இல்லாததால் சமீபத்தில் தனது அதிரூப்தியை தெரிவித்து உள்ளனர் பிரபல
பொய்யரிடம்.

இவர்கள் கூட்டமே இவர்களிடம் அதிருப்தி தெரிவிக்க காரணம் அந்த ஆபாச
வலைதளத்தை இவர்களே நடத்துவதால் தான். இவர்கள் தான் இந்த ஆபாச
 வலைதளத்தை நடத்துகிறார்கள் என்று நாம் ஆரம்பத்திலிருந்தே கூறியும் வருகிறோம்.ஆனாலும் அவ்வபோது அதை மறுத்தும் வந்துள்ளனர் இந்த
 பொய்யர்கள். குறிப்பாக பிரபல பொய்யருக்கு இதில் நிச்சயம் பங்கு உண்டு
 என்று நாமும் அவ்வபோது நிரூபித்தும் வந்தோம்.இதை மக்கள் புரிந்து 
கொண்டாலும் இவர்கள் புரியாதை போல் காலத்தை கடத்தி வந்தனர்.

ஆனால் தற்பொழுது எதிர்ப்புகள் அதிகமாகி அதிர்ப்திகள் வெளிப்பட்டுள்ளதால்
பின்வருமாறு அறிவிப்பு செய்துள்ளனர்.குறிப்பாக யாருக்கு இதில் நெருக்கமாக
தொடர்பு இருக்கிறது என்று நாம் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தோமோ?  அந்த
நபரே அந்த அறிவிப்பு செய்துள்ளது தான் ஆச்சரியம்!!இதோ!அந்த அறிவிப்பு

"இந்த இணயதளம் நம்முடைய ஜமாஅத் சார்பிலோ ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ
நடத்தப்படவில்லை. நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் 1-
onlinepj.com, 2- tntj.net, 3- jesusinvites.com4-thowheedvideo.com
ஆகிய நான்கு தளங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. தரக்குரைவான
விமரசனங்களில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதையும், இது குறித்த நமது
மறுப்பையும் பொய்யனுக்கு  மின்னஞ்சல் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பே
தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்"



இந்த அறிவிப்பில் மாநில நிர்வாகிகளுக்கு பொய்யனில் தொடர்பில்லை என்று
கூறப்படுகிறது.ஆனால் மாநில நிர்வாகிகளுக்கு தொடர்புண்டு என்ற பேருண்மையை
போட்டு உடைக்கிறது பொய்யனில் வந்த 'அண்ணனுக்கு ஒருகடிதம்..!! இதோ!அந்த
கடிதத்தின் உண்மை வரிகள்..

."சில நேரங்களில் நான் கேட்டதற்கு இணங்க ஈமெயில் வழியாக எனக்கு சில

பாயிண்டுகளைத் தந்தீர்கள். உங்களைப் பற்றி எழுதும் அவதூறு
விசயங்களுக்கும் உங்கள் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் உங்கள் கருத்தைக்
கேட்டுத் தான் பதிலளிக்க வேண்டும். கற்பனையில் எழுதினால் அது பொய்யாகப்
போய்விடும்.


இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் செங்கிஸ்கான் சம்பந்தமாக
நான் வெளியிட்ட ஒரு கடிதத்தில் உண்மைத் தன்மை இல்லை என அதை நீங்கள்
நீக்கச் சொன்னீர்கள். ஆனால் அது என் பார்வையில் அது சரியானதாகத்
தோன்றியதால் அதை நான் நீக்க முடியாது என்று மறுத்தேன்." என்று செல்கிறது
கடிதம்.


ஆக ஆபாச இணையதளத்தின் அந்தரங்கத்தில் இருந்துக்கொண்டு  அசிங்கங்களை
வெளியிட்டு அற்புத மார்க்கத்தின் அறிவுரைகளை பின்னுக்கு தள்ளிய
பிற்போக்குவாதி யார்? என்று இப்பொழுது புரிந்திருக்கும்.அதுவும் ஒரு
அமைப்பின் அதிகாரப்பூர்வ இடத்தில் இருந்துக்கொண்டே இந்த காரியத்தை
கச்சிதமாக செய்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆனாலும்
அமைப்பிற்கும் அதில் உள்ள நிர்வாகிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று
வேறு கூறிக் கொள்கின்றனர்.

கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பவர்களுக்கும் காதிருந்தும்
செவிடர்களாக இருப்பவர்களுக்கும் தான் இந்த உண்மை உணர்ந்துக்கொள்ளவது
கடினமாக இருக்குமே தவிர மற்றவர்களுக்கில்லை.

குறிப்பு :"அண்ணனுக்கு ஒருகடிதத்தை உண்மையிலையே அபூயூசுப் தான்
எழுதினாரா?அல்லது அபூ நபிலா எழுதினாரா?என்ற ஒரு சந்தேகம் வலுவாக
எழுந்துள்ளது.அதை உறுதி செய்துவிட்டு எழுதியவரை அம்பலப்படுத்துவோம் இன்ஷா
அல்லாஹ்.

முபாரக்

0 comments:

Post a Comment