Monday, October 24, 2011

தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வந்த மதிமுக மாமன்ற உறுப்பினர் சீமா பஷீர்

தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வந்த
 மதிமுக மாமன்ற உறுப்பினர் சீமா பஷீர் 

தேர்தலில் போட்டியிடா   விட்டாலும் சிறந்த முஸ்லிம் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து 
அவர்கள் எந்தக் கட்சி என்பதை பார்க்காமல் அவர்கள் சமுதாய வேட்பாளர்கள் என்பதை கருத்தில் கொண்டு களமிறங்கி பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கான மண்ணடியில் 60 ஆவது வார்டுக்கு போட்டியிட்ட    மதிமுக வேட்பாளர் சீமா பஷிரை ஆதரித்தது.     


 வெற்றி பெற்ற ம.தி.மு.க. வேட்பாளரான சீமா.பஷீர் கடந்த 22/10/2011 அன்று ஐ.என்.டி.ஜே தலைமையகத்திற்கு வந்து தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் மாநில நிர்வாகிகள்,வட சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தனது வெற்றிக்கான சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

0 comments:

Post a Comment