Monday, October 3, 2011

எழுச்சியுடன் நடை பெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற் குழு. நெல்லையில் இருந்து சென்னை வரை பாப்ரி மீட்பு இரத யாத்திரை.

எழுச்சியுடன் நடை பெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற் குழு.
நெல்லையில் இருந்து சென்னை வரை பாப்ரி மீட்பு இரத யாத்திரை.   





















இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற் குழு நேற்று 2.10.11 மதுரையில் கூடியது! மதுரை முனிச் சாலை சிதம்பர நாடார்-சீனியம்மாள் மகாலில் நடை பெற்ற இந்த செயற்குழுவில் பல்வறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கருத்து கேட்கப்பட்டு இறுதியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.

உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரச்சனைகள் , மற்றும் போட்டியிடுகின்ற நபர்கள் முக்கியத்துவம் பெறுவதால்,  அந்தந்த கிளை மாவட்டங்களே முடிவு செய்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஏகோபித்த் முடிவு எடுக்கப்  பட்டது.

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்களை அண்ணா பிறந்த நாளில் விடுவிக்காத ஜெயலலிதா தனது பிறந்த நாளிலாவது விடுவிக்க வேண்டும்! இல்லை எனில் சிறைவாசிகளை மீட்டெடுக்க பல் வேறு போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது.

பாப்ரி மஸ்ஜித் விசயத்தில் வருகின்ற டிசம்பர் 6 முஸ்லிம்களை தொடர்ந்து     வஞ்சித்து வரும் மத்ய அரசு   மற்றும் நீதித்    துறை  குறித்த  விழிப்புணர்வு  இரத யாத்திரையை நெல்லையில் இருந்து தொடங்கி   டிசம்பர் 6 சென்னை வரை நடத்தி இறுதியில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் போராடுகின்ற நிலையில் இல்லை! எல்லா இயக்கங்களும் தேர்தல் கணக்கும் , எண்ணிக்கை கணக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் நம்மை போராட தேர்ந்தெடுத்து இருக்கிறான்.என எஸ்.எம்.பாக்கர் தனது உணர்ச்சிப் பூர்வமான ஆவேச குரலில் அறிவித்த பொது அல்லாஹு அக்பர் எனும் முழக்கத்தால் அரங்கம் பலமுறை அதிர்ந்தது! அல்ஹம்து லில்லாஹ் !


0 comments:

Post a Comment