Monday, October 3, 2011

சரியான இலக்கை நோக்கி INTJ...

சரியான இலக்கை நோக்கி INTJ





 
அஸ்ஸலாமு அலைக்கும்..... அன்பான செங்கிஸ்கான் அவர்களே ! மற்றும் இந்திய தௌஹீது ஜமாஅத் நிர்வாகிகளே.... தங்கள் ஜமாத்தின் ஒவ்வொரு அசைவையும் நான் கடந்த 2  வருடங்களாக பார்த்து வருகின்றேன். மிகவும் எனக்கு சந்தோசத்தை தருகின்றது... எல்லா புகழும் அல்லாஹுக்கே ...

1 . தஃவா 
இந்த பணியை பொருத்தவரை சிலபேர்கள் செய்து வருகிறார்கள். அவர்களை நான் குறை சொல்ல வில்லை.  இன்னும் சிலர்  செய்தார்கள்.ஆனால் இப்போது இல்லை. ஆனால் நீங்கள் ஜமாஅத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து தொய்வில்லாமல் முழு முயற்சியோடு இந்த தஃவா பணியை பீச், மருத்துவமனை, என்று எல்லா இடமும் செய்கிறீர்கள். மேலும் இலவச மாக குர்ஆணை பார்க்கும் இடம் மற்றும் எல்லா மக்களிடமும் கொண்டு போய் கொடுக்குறீர்கள். (ஒரு காலத்தில் நான் இப்படி அடுத்தவருக்கு வேதம் கொடுப்பதை மிகவும் எதிர்தேன்.ஆனால் இன்று இது உலக மறை என்று விளங்கி என் கருத்தை மாற்றி விட்டேன் ) இது கண்டிப்பாக அனைவருக்கும் போய் சேர வேண்டும். இந்த பணியை அனைவரும் செய்ய வேண்டும். நீங்கள் அதில் நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறீர்கள்.அல்லாஹ் உங்கள் மூலமும் பலருக்கு நேர்வழி கொடுக்க போதுமானவன்
 
2 .போராட்டம் 
இதை பொருத்தவரை அனைத்திலும் நீங்கள் முன்னுதாரணம் ஆக இருக்குறீர்கள். அதற்க்கு சமீபத்தில் நடந்த ஊளை ஓநாய், அயோக்கியன் மோடிக்கு எதிராக உடனே ஆர்பாட்டம் செய்தது. மிகவும் காலம் கடத்தாமல் அவனுக்கும், நம் தமிழகத்தின் முதல்வருக்கும் சாட்டை அடி கொடுத்தீர்கள். வரவேற்க்கதக்கது. அதே போல் பாபரி பள்ளி விசயமாக அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உடனே சென்னையில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி பிற இயக்கத்தை இது விசயமாக சிந்திக்க வைத்தீர்கள். தற்போது புதுபட்டினதிற்க்கு நீங்கள் அது விசயமாக களம் இறங்கிய பின்பு தான் மற்றவர்களை அது விசயமாக தூண்டியது. அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருந்தீர்கள், இப்போது நான் சொல்ல வந்தது நேற்று மதுரை செயற்குழுவில் கூடி நெல்லை இருந்து சென்னை வரை யாத்திரை அறிவித்து இருப்பது அரசியல், மற்றும் எனக்கு தெரிந்து உளவு துறை வரை ஒரு ஆட்டத்தை உண்டாகி இருக்கிறது. காரணம் வெறும் ஆர்பாட்டம் என்றில்லாமல் இப்படி ஒரு புது வியூகம் மிகப்ப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்...
 
3 . அரசியல்
வேண்டாம் இந்த சாக்கடை... காரணம் நான் மேற் கூறிய அத்தனை விசயத்திலும் நீங்கள் வீரியமாக செயல்பட்டது நீங்கள் எந்த அரசியல் தலைவருக்கு பின் சென்று இரண்டு சீட் , மூணு சீட் என்று கேக்கல.அப்படி இந்த குப்பைகளுக்கு பின்னால் சென்றால் தஃவா, இந்த வீரிய ஆர்பாட்டம் எல்லாம் நின்று விடும். (இது என் தாழ்மையான கருத்து) அப்படி சில தலைவருக்கு பின்னால் சென்றதால் இன்றைக்கு சில இயக்கங்கள் மோடிக்கு எதிர்த்து ஒரு சின்ன ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை; காரணம் அம்மா விடம், அல்லது அய்யாவிடம் நமக்கு இடம் கிடைக்காது என்று அற்பமான இந்த 1 , 2 சீட்டுக்கு தங்கள் போராட்ட குணமும், தாங்கள் ஆரம்பித்த இயக்க கோஷங்கள் இன்று ஒரு பாசிச சிந்தனை உள்ள இந்த பெண் இடம் அடகு வைத்து விட்டது. என் போன்ற கொள்கை சகோதரனால் இவைகளை  தாங்க முடியவில்லை. நம் இஸ்லாமிய சகோதரிகளை கருவறுத்த காண்டாமிருகம், நம் தாயை கற்பழித்த அயோக்கிய பாசிச வெறிபிடித்த இந்த ஓநாய் காட்டேரி மோடியை எதிர்த்து ஒரு சின்ன ஆர்ப்பாட்டம் கூட பண்ண வில்லை. நீங்கள் செய்த அந்த ஆர்பாட்டம் தான் ஒரு ஆறுதல்.  ஒரு கூட்டம் இறைவழி போராட்டம், இஸ்லாமிய ஆட்சி என்று கூறியது!!!! அல்லாஹு அக்பர் இன்று அவர்களும் கொடி, கோஷம், சீட்டு என்று போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் மாறினாலும் என்னை போன்ற சகோதர்களின்  இஸ்லாமிய வேக்கை, இந்த மார்கத்திற்காக தியாகம் செய்யும் எண்ணம் கொஞ்சமும் குறைய வில்லை. அல்லாஹ் போதுமானவன். அல்ஹம்து லில்லாஹ்.  இந்திய தௌவ்ஹீது  ஜமாஅத் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். ஆனால் இன்றைய நிலை நம்மை மாற்றி விடாமல் நீங்கள் அடிக்கடி உங்களை பரிசோதித்து கொள்ளவேண்டும். இது கட்டளை அல்ல. என் போன்ற பல கொள்கை சகோதர்கள் உங்களிடம் வைக்கும் அன்பு கட்டளை. 
 
4 . சிறைவாசிகள்
இந்த தலைப்பில் என்னால் பேச முடியவில்லை. காரணம் இந்த சமுதாயத்தில் இவர்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. காரணம் அவர்கள் இப்போது நமக்கு தேவை இல்லை போலும். இன்றைக்கு கோவை மற்றும் மேலப்பாளையம் போன்ற பல சிறை சகோதர்கள் தான் அன்று தமிழகத்தில் தௌஹீதுக்கு பல விசயங்களில் அல்லாஹ் க்காக உறுதுணையாக இருந்தார்கள்.   ( அவைகளை இப்போது  நான் சொன்னால்    அந்த சிறை சகோதர்களின் நன்மை பாலாகி விடும்) ஆனால் இன்று தன்னை தலைசிறந்த தௌஹீது தலைவராக காட்டிகொண்டு இருக்கும் அந்த தொண்டி பாய்க்கு நல்ல தெரியும். அந்த சிறை சகோதர்களுக்கு அவர் செய்த துரோகம் இருக்கிறதே அனைவரும்
 அவருக்கு எதிராக சாட்சியாக வருவார்கள். அது இன்றைக்கு இருக்கிற ஒரு சில அவருடைய பக்தகோடிகளுக்கு தெரியாது. ஏன் நான் இந்த வார்த்தையை போடுகிறேன் என்றால் அவர் பேசிய ஒரு சில சீடி களை  பர்ர்த்து அவர் சூப்பர் மென் என்று நினைக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாது. நாமும் அதை  இங்கே சொல்ல முற்படவில்லை. ஆனால் அவர்கள் இன்று அவர்கள் பல வருடமாக தன் ஹலாலான மனைவியை விட்டு ஒரு நான்கு சுவருக்குள்ளே அடங்கி கிடப்பதற்கு யார் காரணம்? அவர்கள் பதில் சொல்லட்டும். தன் தாய், பிள்ளைகள் அனைவரை விட்டும்., இன்னும் சொல்ல போனால் தன் தாயின் ஜனாசாக்கு கூட வர முடியாமல் கண்ணிற் வடித்து கொண்டு இருக்கிறார்கள். எனவே தாங்கள் (INTJ )  மதுரையில் நடத்தியதை போல தமிழகத்தில் பல இடங்களில் இது போல கூட்டங்கள், முதல் அமைச்சர் முதல் பிரதமர் வரை இந்த சிறைவாசிகளின் பொது மன்னிப்பிற்காக பல முயற்சிகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிறைவாசிகள் விசயமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுக்கும் பல முயற்சிகள் பாராட்ட தக்கது. அல்ஹம்துலில்லாஹ்... உங்கள் முயற்சிகள் வெற்றி பெற இறைவனிடம் பிராத்தனை செய்கின்றேன். மேலும் சகோதர் அப்துல்நாசர் மதானியை வேண்டும் என்றே கர்நாடக பிஜேபி காட்டு தர்பார் செய்து அவர் விசயத்தில் மிகப்பெரும் அநியாயம் செய்கின்றது, இதை தங்களின் மேலான நிர்வாக குழுவுக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன். அவர் விசயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்குமாறு அன்புடன் கேக்கின்றேன்.

5 . கடைசியாக
  நான் தௌஹீத் கொளகையை பின்பற்றி வாழும் ஒரு சகோதரன். மார்க்கம் என்பது எதோ ஒன்னு இரண்டு விசயத்திற்காக அல்ல. அனைத்தும் சேர்ந்த இரு கலவை தான் தௌஹீத் ஆகும். நான் எந்த இயக்கத்தையும் சார்தவன் இல்லை. என்மனதில் பட்டதை நான் சொல்லி உள்ளேன். தங்கள் பாபர் மஸ்ஜித் யாத்திரை வெற்றி பெற வாழ்த்துகின்றேன். எனவே தங்கள் பயணம் அனைத்து விசயத்திலும் தெளிவான இலக்கை நோக்கி செல்ல நான் பிரார்த்திக்கின்றேன். மேலும் கண்ட கண்ட குப்பைகளுக்கு பதில் சொல்லாமல், உங்கள் தஃவா பணி  மென்மேலும் சீர்பெற உங்கள் மஷூர்ராக்களை ஆக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்..
 
 
அபூ அப்துல்லாஹ்
மேலப்பாளையம்


  

0 comments:

Post a Comment