Saturday, July 9, 2011

முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள்.

ஞ்சா வியாபாரியிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள்.!!!!!!!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கண்ணியத்திற்குரிய பாக்கர், ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியவர்களுக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் ட்ரஸ்ட் என்று 2002இல் நான் எழுதியபோது அனைவரும் சேர்ந்து மறுத்தீர்கள். எந்த கடிதத்தை ஆதாரமாகக் காட்டி த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் முஸ்லிம் ட்ரஸ்ட் என்ற வாதத்தை நான் வைத்தேனோ அதே கடிதத்தை ஆதாரமாகக் காட்டிதான் இப்பொழுது த.மு.மு.க.வினர் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
10ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய 24 பக்க கடிதங்களில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை நீங்கள் அனைவரும் சேர்ந்து மறுத்தீர்கள். பிறகு அவ்வப்போது நடந்த ஒவ்வொரு பிரிவினையின் போதும் நீங்கள் ஒருவருக்கொருவர் கூறிக் கொண்ட குற்றச்சாட்டுக்கள் யாவும் நான் எழுதிய 24 பக்க கடிதங்களில் இடம் பெற்றவையாகத்தான் இருந்தது, இருக்கிறது இனியும் இருக்கும். கைர்
உங்களில் யாருக்கு போன் போட்டாலும் எடுக்கும் நிலையில் நீங்கள் இல்லாததால் இந்த பகிரங்க கடிதம். மேலப்பாளையத்தில் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்களோ இல்லையோ அறியத்தருகிறேன்.
25ஆயிரம் கொடுத்தால் மாதம் 3 ஆயிரம். ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 12 ஆயிரம் என்று சொல்லி என்று மேலப்பாளையவாசிகளிடம் ஆசை வார்த்தைகள் காட்டி வசூல் செய்திருக்கிறார்கள். இது ஹலாலானதூன் என்று மஸ்ஜிதுர்றஹ்மாhன் கதீப் மவுலவி ஷம்சுல் லுஹா றஹ்மானி,  இமாம் மசூது யூசுபி ஆகியவர்கள் பத்வா வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் அளித்த பத்வாவை கூறியே வியாபாரம் என்ற பெயரால் 50கோடி ரூபாய் வரை மேலப்பாளைய ஏழைபாளைகளை ஏமாற்றி வசூலித்து இருக்கிறார்கள்.
ஏமாந்தவர்களை போலீசுக்கு போக விடாமல் பல வகையில் தடுத்து வருகிறார்கள். இயக்கத்துக்கு கேவலம் வந்து விடும். கொள்கைக்கு கேவலம் வந்து விடும். ஜமாஅத்துக்கு கேவலம் வந்து விடும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் போலீசுக்கு போவேன் என்றால் கொலை மிரட்டல் செய்கிறார்கள்.
லுஹா குடியிருக்கும் தெருவிலேயே 4 தற்கொலை முயற்சி நடந்து தடுக்கப்பட்டிருக்கிறது. இர்ஷhத் பெண்கள் கல்லூரியில் ஓதாத பெண்களின் திருமணத்துக்கு லுஹா போக மாட்டார். ஆனால் இர்ஷhத் பெண்கள் கல்லூரியில் ஓதாத ஒருபெண்ணின் திருமணத்தை லுஹா நடத்தி வைத்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் அந்த பெண்ணின் சகோதரரும் ஒருவர்.
இந்த பணம் போதை பொருள் வியாபாரியிடம்;தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்த நான் இதில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தர்களை மறைமுகமாக எச்சரித்தேன். அனைவருமே தவ்ஹீதுவாதிகள்தான். அந்த அனைவருமே எனக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார்கள். த.த.ஜ. மட்டுமல்ல த.த.ஜ. அல்லாத எல்லா தவ்ஹீதுகளும் இந்த வியாபாரத்தில் அடங்கி விட்டனர். லுஹாவின் மற்ற பத்வாக்களை எதிர்க்கும் இவர்கள் லுஹாவின் இந்த பத்வாவை மட்டும் ஏற்றுள்ளனர்.
மேலப்பாளையத்தில் பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களை வைத்து கூட்டம் போட வேண்டும் என்று வந்த ஹாமித்பக்ரி இடமும் இது பற்றி கூறினேன். அதன் பின் அவரும் நம்முடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
கடந்த ரமழானில் வழக்கம்போல் ஒரு அரபி 2000திர்ஹம் தந்தார். அதை குறிப்பிட்ட ஒரு மேலப்பாளையவாசிக்கு ரூ25ஆயிரம் கொடுக்கும்படி என் வீட்டில் கூறினேன். அதை பெற்றவர் அந்த 25ஆயிரத்தை தனது கடனில் கழிக்கும்படி கூறி இருக்கிறார். நான் வேண்டாம் அந்த அரபியின் நோக்கம் கெட்டு விடும். அதை ரமழான் மற்றும் பெருநாள் செலவுக்கு அவர்கள் பயன்படுத்தட்டும் என கூறி விட்டேன்.
பெருநாள் கழித்து வந்த செலவு கணக்கில் குறிப்பிட்ட அந்த நபரது வீட்டுக்கும் பெருநாள் டிரஸ் எடுத்து கொடுக்கப்பட்டதாக கணக்கு வந்தது. ஏன் என விசாரித்தபொழுதுதான் அதை மாதம் 3 ஆயிரம் வரும் வியாபாரத்தில் முதலீடு செய்து விட்டார்கள் என்ற தகவல்.  இந்த சம்பவம்தான் அந்த வியாபாரம் பற்றி என்னை விசாரிக்க தூண்டியது.
என்ன தொழில் யார் செய்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் எப்படி ஹலால் என யாரிடம் கேட்டாலும் மஸ்ஜிதுர்றஹ்மாhன் ஷம்சுல் லுஹா றஹ்மானியும் மசூது யூசுபியும் ஹலால் என கூறி இருக்கிறார்கள் என்ற பதிலே வந்தது. ரியல் எஸ்டேட், கப்பலில் இரும்பு வருகிறது, செருப்பு வியாபாரம் என பலரிடமும் பலவிதமாக கூறி இருக்கிறார்கள்.
உண்மையில் அது தூத்துக்குடியைச் சார்ந்த கஞ்சா வியாhபாரியிடம்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியில் இருந்த அவர் இப்பொழுது சாதி கட்சியில் இருக்கிறார். பணம் கொடுத்து ஏமாந்த பலர் குடி இருந்த வீடுகளை விற்றும் அடைமானம் வைத்தும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
கோவை போல் 19 ஆன பின் வராமல் உடனே மேலப்பாளையம் போங்கள். உங்கள் கிளை பொறுப்பாளர்களை அணுகி தீர்காண முயற்சி செய்யுங்கள் வஸ்ஸலாம்.


--

0 comments:

Post a Comment