Saturday, July 30, 2011

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் காவல் துறைக்கு கண்டனம்! வாணியம்பாடியில் INTJ எழுச்சி கூட்டம்!

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் 
காவல் துறைக்கு கண்டனம்! 
வாணியம்பாடியில் INTJ  எழுச்சி கூட்டம்!

வாணியம்பாடி நகரத்தில் சில வாரங்களுக்கு முன் கள்ளச் சாராயம் காய்ச்சும் மகேஸ்வரி கும்பலை கைது செய்யக் கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மக்களை திரட்டி மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது! இந்த ஆர்பாட்டத்தில் கலந்து  கொண்ட   இந்திய தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சுமார் பெண்கள்  உள்ளிட்ட  30 பேர்  மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளது! மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ! 'சில சமுக விரோதிகள் மக்களை போராட்டத்திற்கு தூண்டுகின்றனர்'  என இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசியுள்ளார்!  இதைக் கண்டிக்கும் முகமாக வாணியம் பதியில் நேற்று 29.7.11 அன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது! 


மாவட்ட தலைவர் அத்திக் , செயலர் நவ்சாத் , ஆகியோர் முன்னிலை வகிக்க , மாநில செயலர் செங்கிஸ் கான்  ' இந்திய  சட்டங்களும் இஸ்லாமிய சட்டங்களும் ' எனும் தலைப்பிலும் எஸ்.எம்.பாக்கர் சமுக விரோதிகள் யார்? எனும் தலைப்பிலும் உரையாற்றினர்! மாவட்ட கிளை நிர்வாகிகள்,  பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட எரளமனோர் இதில் கலந்து கொண்டனர்!






              

0 comments:

Post a Comment