Wednesday, July 27, 2011

இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!


இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!


அஸ்ஸலாமு அலைக்கும், 

நமது இலங்கை நாட்டிற்கு விஜயம் செய்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக பொய்யன் டிஜே எனும் சாக்கடை இணையதளம் ஒன்றில் அவதூறுகள் பரப்படுவதை கண்டு கவலை அடைந்தேன். பொய்யன் டிஜே என்று இணையதளத்திற்கு பெயர் சூட்டி உள்ளவர்களிடம் உண்மையை எதிர்ப்பார்ப்பது மடமைதான்.
உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?
அடுத்து இலங்கை நிகழ்ச்சிகள் பலவற்றில் காலத்துக் ஏற்ற தலைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகிகள் பாக்கர், அபூபக்கர், செங்கிஸ்கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். எல்ஃபின் ஸ்டோன் அரங்கில் பாக்கரின் ஒரு மணி நேர உரை சபையோரின் உள்ளத்தை ஈர்ப்பதாக இருந்தது. 
உண்மை இதுவாக இருக்க, பொய்யன் டிஜே என்ற இந்த தனி நபருக்கு தாளம் போடும் இணையதளம் பொய்யான செய்தியை வாந்தி எடுத்துள்ளது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 
டாக்டர் அப்துல்லாஹ்வை கண்காணித்து வருகிறோம் என்று கூறி CBIயின் வேலையை பார்த்தவர்கள் இன்று திடீரென அந்தர் பல்டி அடித்து டாக்டரின் உரை என்றால் கூட்டம் வரும் என்று சாடாயாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாக்கரை பார்க்க கூட்டம் வரவில்லை என்று சொல்பவர்கள் இலங்கையில் M.I.ஸுலைமானை பார்க்க எத்துனை பேர் வந்தார்கள் என்பதை முதலில் சொல்லட்டும். போஸ்டர் ஒட்டுவதும், நோன்பு கஞ்சி காய்ச்சுவதும், போட்டோ பிடித்து மார்க்க பணி என்று செய்தி வெளியிடும் இவர்களின் இலங்கை தக்லீத் கிளை விடவும் மக்கள் ரிப்போர்ட்டில் வந்த போட்டோக்கள் எவ்வளவோ பரவாயில்லை.
அப்துர் ரஹ்மான், கொழும்பு - 9.

0 comments:

Post a Comment