அஸ்ஸலாமு அலைக்கும்.
உணர்வு அலுவலகத்தை "த மு மு க" எடுத்துக்கொண்டது தொடர்பாக, சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்த மௌலவி PJ அவர்கள்.ஒருவன் ஒரு சொத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமேயானால் அதை சட்ட ரீதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக ஆக்கிரமிக்கவோ கைப்பற்றவோ கூடாது என்று கூறுகிறார்.
பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PJ in ERATTAI NILAI PART 1
அதேவேளையில் அவர் தற்போது (TNTJ) ஆக்கிரமித்து வைத்துள்ள JAQH க்கு சொந்தமான கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் (தற்போது சைபுல்லா காஜா வசம் உள்ளது ) திருச்சி சிங்காரத்தோப்பு JAQH மர்கஸ், மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான், பேர்னாம்பேட் JAQH மர்கஸ் ஆகியவைகளை சட்டரீதியாகத்தான் எடுத்துக்கொண்டாரா? மேற்கண்ட பள்ளிவாயில்களின் பத்திரங்கள் JAQH பெயரில் உள்ள நிலையில்தான் அவர் ஆக்கிரமித்துள்ளார் என்பதை அவர் தன்னுடைய வாயாலேயே ஒத்துக்கொள்வதை பாருங்கள்.
பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
PJ in ERATTAI NILAI PART 2
தனக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டமா ? ஏன் இந்த இரட்டை நிலை ?
"எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை "
அல் குர்ஆன் 33:4
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
அல் குர்ஆன் 2:9
--A.M.G.MASOOD
--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
Reply | Reply to all | Forward | Invite AMG MASOOD to chat |
show details 2:12 PM (1 hour ago) |
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏற்கனவே ”பள்ளிவாசல் (திருடர்கள்) ஆக்கிரமிப்பாளர்கள் ஜாக்கிரதை” என்றும்
அடுத்தவர் இயக்கத்தை (முனாஃபிக்) நயவஞ்கத்தனமாக தம் பெயரில் பதிவு செய்து கோர்ட்டில் கேஸ் போடும் இயக்கத்திருடர்கள் ஜாக்கிரதை, என்றும் எனவே திருமணம் செய்தால் உங்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்யுங்கள் இல்லையேல் உங்கள் மனைவியை இதே முறையில் அவர்கள் அபகரிக்கக்கூடும் ஜாக்கிரதை என்றும் இந்த குழுமத்தில் பல எச்சரிக்கைகளை பார்த்து இருக்கிறோம்.
”ஆப்பு வைக்கும் இயக்கம்” என்று சிறப்புப்பெயர் பெற்ற இயக்க்த்துக்கே ஆப்பா??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அவங்க பாணியிலேயே அவங்களுக்கு ஆப்பு “ சரியான போட்டி “
கோர்ட்டு கேஸ் என்பதுதான் இவர்களுக்கு கை வந்த கலையாச்சே அதை விட்டு விட்டு தம்முடைய கூட்டதை கூட்டி எதற்கு போராட வேண்டும். சட்டப்படி தம்முடைய “உணர்வை”திரும்பப் பெற வேண்டியது தானே.
ஏன் இந்த முற்றுகை போராட்டம்? சட்டப்படி ஜெயிக்க முடியாது என்பதாலா? அல்லது தம்மிடம் இருக்கும் (இயக்கப்பற்றுகொண்ட) தொண்டர்கள் கூட்டத்தின் பலத்தை காட்டி மிரட்டி பார்த்து விடலாம் என்பதாலா?
கடையநல்லூர் பள்ளிவாசல் விஷயத்துல அடிச்சிகிட்டு ஜாக் விஷயத்தில் எப்படி போலீஸுக்கு போனார்களோ., அதே போல ” இ த ஜ “ விஷயத்தில் எப்படி கோர்ட்டுக்கு போனார்களோ !! அதே போல ” த மு மு க “ வின் (உணர்வு) விஷயத்திலும். கோர்ட்டுக்குதானே போயிருக்க வேண்டும். இது என்ன சட்டமன்றத்துக்கு போறது, (சின்னப்புள்ள தனமால்ல இருக்குது) கொஞ்சம் கூட அறிவுக்கு பொருந்தவில்லையே...,,,, அப்படியானால் ”ஜாக்” வுக்கு ஒரு வேடம் ”இ த ஜ” வுக்கு ஒரு வேடம் “ த மு மு க “ வுக்கு ஒரு வேடமா?
சட்டப்படி உணர்வு யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்களிடம் கோர்ட்டு ஒப்படைத்து விடும். அதுதான் சட்டம் அதுதான் நியாயம். நீங்க கூட்டம் கூட்டமா பிரிஞ்சி போயிகிட்டே இருப்பீங்க அதுக்காக இருந்த இயக்கத்துல உள்ளதெல்லாம் பிடிங்கிக்கிட்டு போவீங்களா? இந்த இயக்கமே வேண்டாம் என்று பிரிந்து போய் தனி இயக்கம் உருவாக்கும் நீங்கள் எதற்கு அவர்களின் சொத்துக்கு மட்டும் ஏன் அடித்து கொள்கிறீர்கள், அடாவடித்தனம் செய்து ஏன் பிடுங்க பார்க்கிறீர்கள். உங்களிடம் இயக்கவெறி பிடித்த பெரிய கூட்டம் இருக்கிறது என்பதாலா?
அதான் ஊருக்கு ஊர் பள்ளிவாசல் பிரச்சனை காரணமாக ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” TNTJவிலிருந்து பிரிந்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் KNTJ என்றும், நாளை மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத் MPTJ என்றும் இப்படி ஊர் ஊருக்கு ஒரு TJ தவ்ஹீத் ஜமாத் கூடிய விரைவில் உருவாகப்போவது உறுதியாகி விட்டது.
TNTJ பெயரில் பதிவு செய்யப்படும் பள்ளிவாசல் உண்மையில் யார் பெயரில் பதிவு செய்யப்படுகிறது என்றும், TNTJ இயக்கம் உண்மையில் யார் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்றும், முனாஃபிக் தனமாக ”இந்திய தவ்ஹீத் ஜமாத்தை” ரிஜிஸ்டர் செய்தார்களே அதை யார் பெயரில் பதிவு செய்தார்கள் என்பதையும் இந்த டி என் டி ஜே இயக்கப்பற்று கொண்டவர்கள் அறிந்து கொண்டால் அதைப்பற்றி தலைமையிடம் கேள்வி கேட்டால் (தொலைந்தார்கள்) ஒவ்வொரு தொண்டனும் தனி ஜமாதை உருவாக்கி விடுவார்கள்.. முன்னால் ”டி என் டி ஜே” தலைவர் ஸைபுல்லா காஜா வுடைய நிலைமைதான் அவர்களுக்கு.
”டி என் டி ஜே” என்பது பீஜே வின் குடும்பம் மற்றும் அவரது ஜால்றாக்களின் ஜமாத்தாகி விட்டதை அறியாத காரணத்தால் அவர் அழைக்கும் போராட்டத்துக்கு தொண்டர் கூட்டம் கூடுவதாக சொல்லப்படும் செய்திகளின் உண்மை நிலையை தொண்டர்கள் அறிய வேண்டும்.
சிந்தித்து செயல்படுவோம்.
”நான் எந்த இயக்கத்தையும் சர்ந்தவன் அல்ல” பிரிவினை இயக்கவாதிகளால் வேதனைப்படுபவன், முஸ்லிம்களின் சகோதரத்துவதை கூறு போடும் சமூக ஒற்றுமையை சீரழிக்கும் இயக்கப்பற்றை கண்டு ஆதங்கப்படுபவன்.
அல் குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மார்க்க அடிப்படையாக கொண்டு உத்தம சஹாபாக்களின் மார்க்க விளக்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களில் ஒருவன் நான்.
இஸ்லாமிய மார்க்க சகோதரன்.
0 comments:
Post a Comment