Saturday, July 9, 2011

வளைகுடா வரவு !!!!!!!!

வளைகுடா வரவு வற்றி விட்டதா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
கேள்வி;  ''வளைகுடாவில் வாழும் நம் சகோதரர்களும் பொருளாதார மந்த நிலை காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள்'' என்று கூறி டி.என்.டி.ஜே., ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதே! இது வளைகுடா சகோதர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்; அண்ணன் ஜமாஅத்தின் ஆணிவேர் வளைகுடா பொருளாதாரம் தான் என்று அண்ணனே பலமுறை முழங்கியிருக்கிறார். அதனால் தான் 'அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக பீட்டர் அல்போன்சை குறிப்பிட்ட சகோதரர் சைபுல்லாஹ் காஜா மீது நடவடிக்கை எடுத்து நீக்கியவர், பெரியாருக்கு புகழ் பாடிய வளைகுடா எண்ணெய் வயல் மீது 265  நாட்களை கடந்த பின்னும் நடவடி
க்கை எடுக்க
தயங்குகிறார். காரணம் வளைகுடா வரவு குறைந்துவிடக் கூடாதே. ஆனாலும் வளைகுடாவில் 
அண்ணன் ஜமாஅத் ஐஸ்கட்டியாக கரைந்து வருவதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தான் 'வளைகுடா பொருளாதார மந்தம்' என்ற ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. அண்ணன் சொல்லிவிட்டால் அள்ளிக் கொட்டும் சகோதரர்கள் சற்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்போது மந்தமாக உள்ள வளைகுடா 'கவனிப்பு' இன்ஷா அல்லாஹ் மொத்தமாக கைவிரிக்கும்  நாள் விரைவில் வரும் என்பதற்கு அவர்களின் இந்த வாக்குமூலம் ஒரு முன்னோட்டமாகும். 
நேற்று


இன்று 
நாளை [இன்ஷா அல்லாஹ்]

0 comments:

Post a Comment