ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; ''உலகில் குறிப்பாக இந்தியாவில்- ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று மாறன் விசயத்தில் ஊடகங்களை சாடிய கருணாநிதி பாணியில், தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் குறித்த தங்களின் போராட்டத்தை எந்த பத்திரிக்கையும் வெளியிடாததால் ஊடகங்களை டி.என்.டி.ஜேயும் சாடியுள்ளதே?
-ஷாஹித்கான்-ஆற்காடு.
பதில்; தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்போம் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தன்னைப் பின்பற்றும் தம்பிகளை தக்க வைப் பதற்காக போராட்டம்
போராட்டத்தை திரும்பி பார்க்கா தது மேலும் எரிச்சலை
உண்டாக்கியதால் தான் நீங்கள் கூறியது போன்று கருணாநிதி பாணியில் ஊடகங்களை தனது உணர்வு பத்திரிக்கையில் தாக்கியிருக் கிறார். அதுவும் எங்கள் போராட்டங்களை பெரும்பாலும் ஊடகங்கள் புறக்கணிக்கிறது என்று சொன்னால் கேவலம் என்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குதிக்கிறார். ஆனால் ஊடகங்கள் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை முழு அளவில் புறக்கணிப்பதாக கூறமுடியாது. இன்று கூட தினமணியில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க; http://epaper.dinamani.com/ newsview.aspx?parentid=23361& boxid=24318703&archive=false
அவ்வளவு ஏன் அண்ணன் ஜமாஅத்தின் சில போராட்டங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு இதை பாருங்கள்;
உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி வழியில், தங்களது தோல்வியை பத்திரிக்கைகளை சாடி மூடி மறைக்கப் பார்க்கிறது அண்ணன் ஜமாஅத். கேடு வரும் பின்னே.. மதி கெட்டுவிடும் முன்னே என்பது அண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்துவதை அவரது சமீபத்திய சில ஆண்டுகால நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதில் ஒன்றுதான் இதுவும்.
__._,_.___
0 comments:
Post a Comment