Saturday, November 5, 2011

இலங்கையில் குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு தவ்ஹீத் மதரஸா கூட இல்லையாம்....! உண்மையா?


 
இலங்கையில் குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில், தூய இஸ்லாத்தைப் போதிக்கும் ஒரு தவ்ஹீத் மதரஸா கூடஇல்லையாம்....! இந்த பேச்சாளர் கூறுகிறார். அதுமட்டுமல்ல., 
தூயவடிவில் தவ்ஹீதைப்  போதிக்கும் ஒரே மதரஸா 
தமிழகத்தில் தான் இயங்குகிறது என்றும் இவர் காட்டமுனைகிறார். இதற்கு இலங்கை தவ்ஹீத்வாதிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? -முகவை அப்பாஸ் 

பார்க்க வீடியோ;

5 ஆவது மத்ஹப் வாதம் - இலங்கை தவ்ஹீத் சகோதரர் பதில் !

இன்று இலங்கையில் நாங்களும் தௌஹீத் வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டுஇ அதில் மத்ஹப் வாதத்தை சில தௌஹீத் அமைப்புகள் உண்டாக்கி வைத்திருப்பது மிகவும் வருத்தத்துக்குறியது.

அத்தகைய அமைப்புகளில் இருக்கக் கூடிய சிலர்  தென்இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட உலமாவின் மத்ஹப்பை பின்பற்றுவது மட்டுமல்லாமல் அவர்கள் அங்கே கல்வி கற்றதால் அவர்கள் மட்டும் தான் சரியான தௌஹீதில் இருக்கிறார்களாம். 

மற்ற இலங்கையில் இருக்கக்கூடிய எல்லா மத்ரஸாவும் மத்ஹப் பாடத்திட்டங்களான உண்டாவையும் மஹல்லீயையும் கொண்டு மட்டும் தான் இயங்குகிறதுஇ ஒரே ஒரு மத்ரஸா கூட அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் கற்றுக் கொடுப்பதில்லை. 

யாருமே தூய்மையான தௌஹீதை கற்றுக் கொடுப்பதில்லை என்றுஇ அவர்களுடய மத்ஹபு வாதத்தை மறைப்பதற்காக பிறர் மேல் வாய் கூசாமல் மேடையேறி பழி சுமத்துகிறார்கள்.

அவர்கள் கற்று வந்த தென் இந்திய மத்ரஸா மட்டுமேயாம் தூய்மையான தௌஹீத் மத்ரஸா. 

இலங்கையிலுள்ள மற்ற அனைத்து மத்ரஸாவும் மத்ஹபை கற்றுக் கொடுக்கும் மத்ரஸா என்று மார்தட்டும்  போதேஇ இவர்ளை அறியாமலேயே நாங்கள் மத்ஹபுவாதிகள் தான் என்று ஒத்துக் கொள்ளும் பரிதாப நிலையை காண முடிகிறது.
இவர்கள் சொல்வது போல் ஒரு சில இடங்கள் இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் அதனை விட ஹதீத் கலை ஆய்விலும் குர்ஆனை கற்றுக் கொடுப்பதிலும் சிறந்த மத்ரஸாவை நடாத்தும் உலமாக்கள் மூலமாகத்தான் இலங்கையில் நேர்வழி போன்ற சஞ்சிகையின் ஆக்கங்கள் எழுதப்பட்டு வருகிறது. அந்த சஞ்சிகை ஆக்கங்களின் தரமே அதற்கு சாட்சியாகும். அந்த மத்ரசாவின் நுழைவுப் பரீட்சைக்கு கூட அந்த தென் இந்திய உலமா(இவர்களின் உஸ்தாது) தகுதியுடயவராய் இருப்பாரோ தெரியாது?

இலங்கையில் நிறுவனங்களை சாராத நிறைய உலமாக்கள் இன்று தூய்மையான மார்க்கப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

இது இந்த மகா மேதைகளுக்கு தெரியாது போலும்.

எல்லா மத்ரஸாவையும் ஒரே தராசில் ஏற்றிவிட்டு தாங்கள் மட்டுமே தௌஹீத்வாதிகள் மத்ஹப்வாதிகளல்லஇ நாங்கள் பத்து பேர் மட்டுமே இலங்கையிலுல்ல சிறந்த தாயிகள்இ என்று கூறும் அங்கு கற்று வந்தவர்கள் குறிப்பிட்ட அந்த மத்ராஸாவை நடாத்தும் உலமாவின் கருத்துகளை மட்டுமல்லாது அவரின் பேச்சுநடைஇ அங்க அசைவு ஆகியவற்றை கூட அவர்களுடய மத்ஹபாக பின்பற்றுகின்றனர். 

அதில் கூட அவர்களுடய தனித்தன்மையை பேண முடியாத அப்பாவிகளாக இருக்கின்றனர்.தென் இலங்கையில் பிறந்தவர் தொண்டித் தமிழில் மிமிக்ரி செய்வது வேடிக்கையாக உள்ளது.

நாங்கள் மதுஹப்வாதிகளல்ல என்று கூறும் இவர்களது இடத்தில் நடைபெறக்கூடிய ஒரு ஜூம்ஆவிற்காவது பிறை விடயத்தில் சர்வதேச பிறையை ஆய்வின் அடிப்படையில் ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைத்த ஒரு உலமாவுக்கு ஜூம்ஆ செய்யும் வாய்ப்பு கொடுப்பார்களா? 
-ஜாகிர் ஹுசைன் தமிழ் முஸ்லிம் குழுமத்தில் 


-- 

0 comments:

Post a Comment