Friday, November 11, 2011

கடந்த வாரத்தில் தலைமையகத்தில் நால்வர் இஸ்லாத்தை ஏற்றனர்.

கடந்த  வாரத்தில் தலைமையகத்தில்  நால்வர் இஸ்லாத்தை ஏற்றனர். 

அல்லாஹ்வின் அளப்பரிய கருணையினால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்  இறை வேதம் வழங்கும் நிகழ்ச்சியின் மூலமும், அதன் செயல் வீரர்களின்  அழைப்புப் பணியின் மூலம் அநேகர் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் கடந்த வாரம் மூவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியை வெளியிட்டிருந்தோம்.அல்ஹம்து லில்லாஹ்.
இந்த வாரம் நால்வர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மத் பாஷா  எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது கலிமா சொல்லிக் கொடுக்கும் தலைவர்.எஸ்.எம்.பாக்கர்.  



குமாரகுருவாக இருந்து இன்று 11.11.11 ஜும்மாவிற்க்குப்   பின் இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் உமர் எனும் சகோதரருக்கு  கலிமா சொல்லிக் கொடுத்த                           செங்கிஸ்  கான்


சென்னை ஆசாத் நகரை சேர்ந்த முருகன் எனும் சகோதரர் இஸ்லாத்தை   ஏற்று தன்னை முஹம்மத் ஆக மாற்றிக் கொண்ட போது 

 மகனின் வழியில் முருகனின் தந்தை தங்கராஜ் அவர்களும்
இஸ்லாத்தை தன வாழ்வியல் ஆக ஏற்றுக் கொண்ட போது  .
அல்ஹம்து லில்லாஹ் ! இன்ஷா அல்லாஹ் இவர்களுக்கென தலைமையகத்தில் அடிப்படை பயிற்சி வகுப்புகளும் நடை பெறுகிறது.
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கென கத்னா ,அபிடவுட் பயிற்சிக் கால உணவு,
தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்கப் படுகின்றன.

 'உங்களால் ஒருவர் நேர் வழி பெறுவது செந்நிற ஒட்டகை கிடைப்பதற்க்கு சமமாகும்'. எனும் நபி மொழிக்கேற்ப இந்த நன்மைக்கு செலவிடுவதன் மூலம் அந்த  நன்மையைப் பெறுங்கள். நபர் ஒருவருக்கு மூன்று மாத கால  செலவு தொகை பத்தாயிரம் ஆகும். வழங்க விருப்பமுள்ளவர்கள்
தொடர்புக்கு 944822330 /31
  
  

0 comments:

Post a Comment