INTJ கீழக்கரை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை! மற்றும் குர்பானி விநியோகம்.
நேற்று (07.11.2011) அன்று கீழக்கரை 500 பிளாட்டில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை இறையருளால் காலை 7.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மாநில பேச்சாளர் யாஸீப் குத்பா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் கீழக்கரை நகர் கிளை மிகச் சிறப்பாக செய்திருந்தது.
அவ்வாறே கே.ஈ.சி.டி திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் நிகழ்த்தினார். முன்னதாக தொழுகையினை அபூபக்கர் ஆலிம் நிகழ்த்தினார்.
எராளமான ஆண்களும் பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகைக்குப் பின் INTJ சார்பில் வாங்கப் பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் ஆறு ஆடுகள் ஒட்டகம் போன்றவை குர்பானி கொடுக்கப் பட்டு அதன் கறி ஏழை எளியோருக்கு வழங்கப் பட்டது.
-அபூ அவ்ன்.
0 comments:
Post a Comment