Sunday, November 20, 2011

தடையை மீறி ரத யாத்திரை செல்ல முயன்ற ஐ.என்.டி.ஜே. எஸ்.எம்.பாக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது !



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த பாபர் மஸ்ஜித் ரத யாத்திரையை கடைசி நேரத்தில் ரத்து செய்த காவல் துறை கடுமையான கெடு பிடி செய்து ரதயாத்திரையை முடக்க நினைத்தது ஒரு பக்கம்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது நாங்கள் எந்த ரதயாத்ரையும் நடத்த வில்லை, எனவே இதை தடுக்க வேண்டும் என அண்ணன் ஜமாஅத் மேலப்பாளையம் மேலாண்மை புகார் அளித்து  கொடுத்த மன உளைச்சல் இன்னொரு பக்கம் இத்தனையையும் தாண்டி சென்னையில் இருந்து ரதத்தை நெல்லை கொண்டு வந்து சேர்த்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல் வீரர்கள்.

காலை   பத்து மணிக்கெல்லாம் மேலப்பாளையம் பரபரப்பானது! பஜார் திடலில்  காவல் துறை அணி வகுப்பு நடத்தி உள்ளூர் மக்களை ரதயத்ரையில் கலந்து கொள்ள விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்தது . அனைத்தயும் மீறி வேறு இடத்தில் வைக்கப் பட்டிருந்த ரதத்தை பஜார் திடலுக்கு கொண்டு வர முயற்சித்த பொது அங்கேயே தடுத்து நிறுத்த முயன்ற துணைக் கண்காணிப்பாளரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர்  முற்றுகையிட்டு கேரோ செய்தனர் துணை பொது செயலாளர் இக்பால் மற்றும் மாநில செயலாளர் அபு பைசல் ஆகியோர் வந்து கடும் வாக்கு வாதம் செய்து பின்னர் ரதம் விடுவிக்கப் பட்டு தொண்டர் அணி தலைவர் கோவை பாருக் தலைமையில் அணி வகுத்து வந்த சீருடை அணிந்த தொண்டர்கள் புடை ச்சொல அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கங்களுடன் மேலப்பாளையம் வீதிகள் வழியாக பஜார் திடல் வந்தடைந்த போது உணர்ச்சி பெருக்கெடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

துணைப் பொது செயலாளர் தலைமை உரை ஆற்ற அடுத்து சமுக ஆர்வலர்கள்  பத்திரிக்கையாளர் மணி, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சேலையூர் சீனிவாசன் உள்ளிட்ட மாற்று மத சகோதரர்கள் உரை நிகழ்த்தினர். இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய எஸ்.எம்.பாக்கர் காவல் துறையின் அராஜகத்தை கடுமையாக சாடினார். ரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கு மீண்டும் ரதயாத்திரை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் தமிழக அரசு முஸ்லிம்களின் ரதயத்ரைக்கு அனுமதி மறுப்பதேன்? நாங்கள் என்ன இந்த நாட்டின் இரண்டாந்தர குடி மக்களா? என கேள்வி எழுப்பினார்.மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் திங்கள் அன்று இதை எதிர்த்து நீதி மன்றம் செல்லவிருப்பதாகவும் நீதி மன்றத்தில் அனுமதி பெற்று ரத யாத்ரையை நடத்தியே தீருவோம் என முழங்கினார்.

பின்னர் காவல் துறை தான் கைது நடவடிக்கையை துவங்கியது நூற்றுக்கணக்கனோர் நெஞ்சுறுதியோடு பதினைந்து நாள் ரிமாண்டுக்கு தயாராக தங்கள் உடைகளோடு வந்திருந்தது காவல் துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது.மண்டபத்தில் தொழுகை பயான்என மிகவும் பயனுள்ளதாக நேரம் சென்று கொண்டிருந்தது.ஏறாலமன் பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் இந்நிகழ்ச்சியை படம் பிடித்தனர்  .  மாலைப்  பத்திரிக்கைகள்   இந்த நிகழ்வை முதன்மை செய்திகலாக்கியது.  நடு நிலை கொண்ட காட்சி ஊடகங்களும் செய்திகளில் ஒளிபரப்பியது.முதலில் ரிமாண்ட் என பூச்சாண்டி காட்டிய காவல் துறை இறுதியில் மாலை ஏழு மணிக்கு விடுதலை செய்தது. அல்ஹம்து லில்லாஹ் எல்ல்லப் புகழும் இறைவனுக்கே!       
  
























0 comments:

Post a Comment