Sunday, November 27, 2011

' பாலம் பேசுகிறது' தாராபுரம் INTJ விழிப்புணர்வு!






தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப்பணி மற்றும் பொது நலச்சேவையாக தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள ராஜா வாய்க்கால் பாலம் முற்றிலும் சிதிலமடைந்து பல விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டிருந்ததை கண்ட  தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள்  தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலர் மற்றும் தாராபுரம் வருவாய் கோட்டச்சியர் தாராபுரம் நகராட்சி ஆணையாளர்களுக்கு பாலத்தின் சுற்றுச்சுவர் அமைக்க நேரில் சென்று பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய மனு அளிக்கப்பட்டது மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள் பிறகு பாலத்தில் பொது மக்கள் தவறி விழாமல் இருப்பதற்க்கும் அரசின் கவனத்தை ஈர்ப்பதர்க்கும் பாலத்தின் அருகில் பாலம் பேசுகிறது என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டது உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பாலத்தை சரிசெய்வதாக நகர தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதுடன் நில்லாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தையம் சரி செய்தார்கள்  தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சீரிய முயற்ச்சியால் பாலம் விரைந்து சீரமைக்கப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் நமது அலுவலகத்திற்கு வந்து பாராட்டி சென்றனர்[அல்ஹம்துலில்லாஹ்]                                                                                                                                                                                                                           செய்தி : மார்வலஸ் சாகுல்   




                             

0 comments:

Post a Comment