Wednesday, November 23, 2011

இரத்த தானத்திற்கு விருது வழங்கிய சபாநாயகருக்கு INTJ சார்பில் இறைமறை!

                           பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ர்ரஹீம்   

ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து ரத்த  தானம் செய்வோம் மனித உயிர் காப்போம் எனும் முழக்கத்தோடு முகாம்கள் மூலமாகவும் அவசர கால ரத்த தானம் மூலமாகவும்   உதிரம் கொடுத்து உயிர் காத்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை பாராட்டி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் நடை பெற்ற விழா ஒன்றில் இன்று விருதுகள் வழங்கப் பட்டது !



 மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ் மற்றும் தென் சென்னை, வட சென்னை மாவட்ட நிர்வாகிகள், மருத்துவ அணி செயலாளர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர். எங்கும் தஃவா   எதிலும் தஃவா என இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விருது வழங்கிய தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயகுமார் அவர்களுக்கு திருமறைக் குரான் தமிழாக்கம் வழங்கினர்.

0 comments:

Post a Comment